search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்
    X

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

    • சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளது.

    டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இம்மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்தது.

    இந்த நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 5 நாள் காவல் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அம்மனுவில், இந்த வழக்கில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை காவலில் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சிபிஐ வாதங்களை கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடைபெற்ற நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அப்போது, சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×