search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநில துணைத் தலைவர் ராஜினாமா: அரியானாவில் பாஜக-வுக்கு பின்னடைவு
    X

    மாநில துணைத் தலைவர் ராஜினாமா: அரியானாவில் பாஜக-வுக்கு பின்னடைவு

    • இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா.
    • விசுவாச தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதாக துணைத் தலைவர் குற்றச்சாட்டு.

    அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. அதேவேளையில் ஆட்சியை பாஜக-விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த முறை பாஜக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணி தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே இரண்டு மந்திரிகள், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அரியானா மாநில பாஜக-வின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    கட்சிக்கு விசுவாசமாக உழைத்த தொண்டர்களை விட, உழைக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என சந்தோஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், தனது ராஜினாமா கடிதத்தில் "கட்சிக்கான என்னுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சிகள் கொள்கையை பின்பற்றியுள்ளேன். ஆனால் அடிமட்டத்தில் போராடி, பக்தியுடன் உழைத்து, கட்சியை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்களை கட்சி புறக்கணித்து வருகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.

    இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சிக்காகவும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காகவும் உழைக்காத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் பரப்பி வருகிறது" சந்தோஷ் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் யாதவ் அட்டெலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், மத்திய மந்திரி ராவ் இந்தரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவிற்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த சனிக்கிழமை முன்னாள் மந்திரி பச்சான் சிங் ஆர்யா பாஜகவில் இருந்து வெளியேறினார். சிஃபிடான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையிலா் ஜனநாயக் ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த குமார் கவுதமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ராஜினமானா செய்தார்.

    தற்போது சந்தோஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னதாக இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×