search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இரவில் தூக்கமில்லை.. மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று பேசிய மம்தா!
    X

    இரவில் தூக்கமில்லை.. மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று பேசிய மம்தா!

    • எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர்.
    • நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை இரண்டு நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்திப்புக்கு மம்தா அழைத்திருந்தார்.

    ஆனால் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் 2 மணி நேரமாக மம்தா காலை இருக்கைகளுக்கு முன் காத்துக்கிடக்க நேர்ந்தது. இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் மம்தா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    இந்நிலையில்சுவஸ்திய பவன் முன் போராடும் மருத்துவர்களைச் சந்திக்க மம்தா நேரிலேயே சென்றுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் முன் உரையாற்றிய மம்தா, நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல. எனது பதவி பெரிதல்ல. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் இங்கு போராடிக்கொண்டிருந்தீர்கள். இதனால் நேற்று இரவு நான் தூங்கவேயில்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக தான் கலைப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையைத் தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி என்று மம்தா தெரிவித்திருந்தார். மம்தா அங்கிருந்து சென்ற பின்னர் ஊடகத்திடம் பேசிய பேசிய மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×