search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி- போலீஸ் விசாரணை
    X

    டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி- போலீஸ் விசாரணை

    • உயிரிழந்த நபரின் உடலிலோ அல்லது கட்டிடத்திலோ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் காணப்படவில்லை.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடம் கட்டுபவரான ஹரீஷ் என்பவரை கைது செய்தனர்.

    தெற்கு டெல்லியின் மாளவியா நகரின் நில் பிளாக்கில்ரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து 41 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், நபர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்ததை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், பீகார் மாநிலம் கதிகாரைச் சேர்ந்த ஷேக் ஷா ஆலம் என்பவர் தவறி விழுந்து இறந்ததாகவும், அப்போது கட்டிடத்தில் பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்ததாகவும் காவல்துறை துணை ஆணையர் சந்தன் சௌத்ரி தெரிவித்தார்.

    மேலும், உயிரிழந்த நபரின் உடலிலோ அல்லது கட்டிடத்திலோ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் கூறினார்.

    இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடம் கட்டுபவரான ஹரீஷ் என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×