search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம்
    X

    கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம்

    • உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது.
    • பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    * உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது.

    * நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் சம வாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    * அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது.

    * பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.

    * தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×