search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    NEET ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் சரி: கருணை மதிப்பெண் பெற்ற 4.2 லட்சம் பேர் நிலை என்ன?
    X

    "NEET" ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் சரி: கருணை மதிப்பெண் பெற்ற 4.2 லட்சம் பேர் நிலை என்ன?

    • நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் சரி என என்டிஏ மதிப்பெண் வழங்கியுள்ளது.
    • ஏதாவது ஒன்று தவறு என்றால் மதிப்பெண் இழக்கும் அபாயம் இருந்ததால் எதையும் தேர்வு செய்யவில்லை- மாணவி.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 60 பேர் முழு மதிப்பெண் பெற்றது, 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தேர்வு எழுதியவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

    இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டது.

    கடந்த வார விசாரணையின்போது, தேசிய தேர்வு முகமை தேர்வுகள் நடைபெற்ற நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக முடிவை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி என்டிஏ (National Testing Agency) முடிவுகளை வெளியிட்டது. அப்போது ஏற்கனவே அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு மையத்தில் ஆறு பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இந்த நிலையத்தில் 682-தான் அதிகபட்ச மதிப்பெண் எனத் தெரியவந்தது.

    இந்த நிலையில் மாணவி ஒருவர் 29-வது கேள்விக்கு குழப்பமான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அணு தொடர்பான கேள்விக்கு ஆப்சன் 2 மற்றும் ஆப்சன் 4 ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நான் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தால் ஒரு மதிப்பெண் குறைந்து விடும் என்பதால் பதில் அளிக்க தவிர்த்துவிட்டேன்.

    இதனால் நான் 720-க்கு 711 மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு மதிப்பெண் அளித்திருந்தால் 4 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முன்னேறியிருப்பேன். 311-வது தரவரிசை பெற்றுள்ள அந்த மாணவி ஒரு கேள்விக்கு இரண்டு பதில் எப்படி சரியானதாக இருக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆப்சன் 2-ஐ தேர்வு செய்துள்ளதால் 44 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஐஐடி டெல்லி மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து நாளைக்கு சரியான விடையை தெரிவிக்குமாறு ஐஐடி டெல்லி இயக்குனருக்கு நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த விசாரணையின்போது நீதிமன்றம் "இரண்டு ஆப்சனுக்கும் மதிப்பெண் கொடுக்கும் முடிவுக்கு என்டிஏ ஏன் வந்தது?" எனக் கேட்டது.

    அதற்கு என்டிஏ சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "ஏனென்றால் இரண்டுமே சாத்தியமான பதில்கள்" என்றார்.

    உடனே மனு தாக்கல் செய்தவர் "அதற்கு வாய்ப்பே இல்லை. ஆப்சன் 2 "atoms of each elements are stable and emit their characteristic spectrum" எனச் சொல்கிறது. பழைய புத்தகத்தில் "atoms of each element" என உள்ளது. ஆனால் புதிய புத்தகத்தில் "atoms of most elements" என உள்ளது. இது ஆப்சன் 4-ல் கேட்கப்பட்டுள்ளது. இரண்டும் சரியாக இருக்க முடியாது" என்றார்.

    என்டிஏ "மாணவர்கள் புதிய புத்தகத்தை பயன்படுத்தியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 4 சரியான பதிலாக கொடுக்கப்பட்டது. 4.2 லட்சம் மாணவர்கள் ஆப்சனை 2-ஐ தேர்வு செய்து 4 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்தது.

    "இரண்டையும் சரியான பதில்களாக நீங்கள் கருதியிருக்க முடியாது. நீங்கள் எந்த விருப்பத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    "மேலும், எங்களை கவலையடையச் செய்வது என்னவென்றால், நீங்கள் செய்ததன் பலனை நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளனர்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இத்துடன் இன்றைய விசாரணையை முடித்து நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

    Next Story
    ×