search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி - போராட்டத்தை தொடரும் மருத்துவர்கள்.. மம்தா நேரலையை மறுப்பது ஏன்?
    X

    பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி - போராட்டத்தை தொடரும் மருத்துவர்கள்.. மம்தா நேரலையை மறுப்பது ஏன்?

    • நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்த நிலையில் சந்திப்பை நேரலை செய்தால்தான் வருவோம் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் போராட்ட களத்துக்கு சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினார்.

    இதன்பின் நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது. வீட்டுக்குள் வரமால் மழையில் நனைந்தபடி வெளியிலேயே நின்ற அவர்களை மம்தா உள்ளே அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது மருத்துவர்கள் நேரலையை மீண்டும் வலியுறுத்தினர்.

    ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் நேரலைக்கு சாத்தியமில்லை. உச்சநீதிமன்ற அனுமதி பெற்று இந்த சந்திப்பை வீடியோ பதிவு செய்து, அதன் நகல் உங்களுக்கு தரப்படும் என்று மம்தா விளக்கினார். மேலும் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார். இதனால் மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். எனவே 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

    மருத்துவர்கள் பொதுக்குழுக் கூட்டம் கூட்டி, பயிற்சி பெண் மருத்துவர் கொலைக் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும்,காதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×