search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குக்காக லஞ்சம் வழக்கில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் விலக்கு கோர முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    X

    "வாக்குக்காக லஞ்சம்" வழக்கில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் விலக்கு கோர முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும்.
    • விலக்கு அளித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு முரணாக உள்ளது.

    வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறுதல், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும்.

    லஞ்சம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை என்றும், 1998-ன் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் விளக்கம் அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுக்கு முரணானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளார்.

    Next Story
    ×