search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
    X

    நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

    • தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது.
    • 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

    நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக லீக்கானதாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றனர் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

    இன்றைய விசாரணையின்போது நீட் மறுதேர்வு கிடையாது. தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஒட்டுமொத்த சிஸ்டமும் மீறப்பட்டுள்ளது அல்லது தேர்வின் புனிதம் மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு தற்போதைய நிலையில் வருவது மிகவும் கடினமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×