search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பிரதமர் மோடி இன்று அயோத்தி நகருக்கு பயணம்- தீபாவளியை கொண்டாடுகிறார்
    X

    பிரதமர் மோடி இன்று அயோத்தி நகருக்கு பயணம்- தீபாவளியை கொண்டாடுகிறார்

    • ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை பிரதமர் பார்வையிடுகிறார்
    • சரயு நதி கரையில் முப்பரிமாண கிராபிக்ஸ் காட்சிகளை தொடங்கி வைக்கிறார்

    தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை அவர் ஆய்வு செய்கிறார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.

    6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தி நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கி வைக்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


    தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனங்கள் இடம் பெற்ற ராம்லீலா மற்றும் அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம் பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசையுடன் கூடிய லேசர் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×