search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Andhra cops line up liquor bottles for disposal, locals grab and run off.
    X

    போலீஸ் அழிக்க வைத்திருந்த மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள் - வீடியோ

    • சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர்.

    ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர். அப்போது அந்த இடத்திற்கு முந்தியடித்து கொண்டு வந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்களை தூக்கிச் சென்றனர். மதுபிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Next Story
    ×