search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது காங்கிரசுக்கு பிடிக்கவில்லை: பிரதமர் மோடி
    X

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது காங்கிரசுக்கு பிடிக்கவில்லை: பிரதமர் மோடி

    • விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை.
    • அதிகாரப்பசி உள்ளவர்கள் பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர் என்றார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒடிசாவில் இரட்டை என்ஜின் ஆட்சி நடப்பதால் வளர்ச்சிக்கான பயணம் புதிய சிறகுகளைப் பெற்றிருக்கிறது.

    ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு வந்தது. அந்தப் பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுபூர்வமான அனுபவம்தான் என் வாழ்வின் மூலதனம்.

    என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன்.

    விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர்.

    அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதை பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×