search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பிரதமர் மோடி கேமரா இன்றி தியானம் செய்ய வேண்டும்: தேஜஸ்வி யாதவ்
    X

    பிரதமர் மோடி கேமரா இன்றி தியானம் செய்ய வேண்டும்: தேஜஸ்வி யாதவ்

    • கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
    • படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார்.

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார்.

    கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.

    தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என திமுக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமரின் தியான நிகழ்ச்சி குறித்து பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தியானம் செய்ய அல்ல. கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "பிரதமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×