search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டர் கொலை வழக்கு: புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    பெண் டாக்டர் கொலை வழக்கு: புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    • பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட தொடர்பான விசாரணை நிலை அறிக்கை உச்சநீதிமன்றம் தாக்கல்.
    • டாக்டர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழந்துள்ள என மேற்கு வங்க சுகாதாரத்துறை அறிக்கை.

    மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் பயிற்சி டாக்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது மேற்கு வங்க சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படடது. அந்த அறிக்கையில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிஐஎஸ்எஃப்-க்கு தேவையைான அனைத்தையும் இன்றைக்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தடயவியல் மாதிரிகளை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளன எனக் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ந்தேதி புதிய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வெண்டும் என உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×