search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Sanjay Raut
    X

    மகாராஷ்டிராவில் இது நிச்சயம் நடக்காது: அடித்து சொல்கிறார் சஞ்சய் ராவத்

    • மும்பை சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டது.
    • அங்கு நடந்த பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கலந்து கொண்டார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் தசரா திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    அரியானா தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் காலையில் காங்கிரஸ் 72 இடங்களைப் பெற்றதாகக் காட்டியது,

    ஆனால் பிற்பகலில், பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்தது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

    இது இவிஎம் மோசடி மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை. ஆனால் மகாராஷ்டிரா தேர்தலில் இது நிச்சயம் நடக்காது என உறுதிபட தெரிவித்தார்.

    Next Story
    ×