என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீதிபதி திட்டியதால் ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சப் இன்ஸ்பெக்டர் - வீடியோ
- நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார்
- ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆணையர் [சப் இன்ஸ்பெக்டர்] ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், உ.பி அலிகார் பகுதி காவல் துணை ஆணையர் ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்டதும் பதிவாகியுள்ளது.
மேலும் நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார் என்று சக போலீசிடம் அந்த சப் இன்ஸ்பெக்டர் கூறி அழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
अलीगढ़ में जज अभिषेक त्रिपाठी से तंग आकर UP पुलिस के सब इंस्पेक्टर सचिन कुमार आत्महत्या करने रेल पटरी पर बैठ गए।दरोगा के अनुसार – "पुलिस ने 5 बाइक चोर पकड़े थे। मैंने उन्हें कोर्ट में पेश किया। जज कह रहे थे कि तुम फर्जी लोग पकड़कर लाए हो। जज ने मुझसे बदतमीजी की" pic.twitter.com/ZupKttZt29
— Sachin Gupta (@SachinGuptaUP) September 17, 2024
அந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சச்சின் குமார் என்பதும் சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக அவர் 5 பேரை கைது செய்ததற்கு ஏன் அப்பாவிகளைக் கைது செய்தாய் என கூறி நீதிபதி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரெயில்வே டிராக்கில் சென்று அமர்ந்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்