search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
    X

    தற்கொலை செய்து கொண்ட ஷாஜி- ஸ்ரீஜா

    கேரளாவில் 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

    • ஷாஜியின் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.
    • சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டு கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா வெம்பிரஞ்சன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் இருவரும் கடந்த வாரம் 16-ந்தேதி 2-வது திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்பு அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனின் 3 குழந்தைகளும் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் ஷாஜியின் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டு கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பார்த்த போது வீட்டுக்குள் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனும், அவரது 2-வது கணவர் ஷாஜியும் தூக்கில் பிணமாக தொங்கினர். வீட்டில் இன்னொரு அறையில் அவர்களின் 3 குழந்கைளும் இறந்து கிடந்தனர். அவர்கள் 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை.

    போலீசார் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×