என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த லிப்டில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
Byமாலை மலர்18 March 2023 10:11 AM GMT
- படுகாயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
- சம்பந்தப்பட்ட லிப்ட் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
டெல்லியில், கமலா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடத்தின் திறந்த லிப்டில் இருந்து தவறி விழுந்து 29 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், " சம்பவ இடத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆய்வு செய்தனர். அங்கு இரும்பிலான திறந்தவெளியில் லிப்ட் ஒன்று பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த லிப்ட் பாதி வழியில் நின்ற நிலையில் அந்த நபர் கீழே படுகாயங்களுடன் கிடந்துள்ளார். இதை கவனித்த உரிமையார் மற்றும் சிலர் இளைஞரை மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட லிப்ட் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X