search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவையில் எலியும் பூனையும்... தேனீர் விருந்தில் வணக்கம் சொல்லி, புன்னகைத்த பிரதமர் மோடி- ராகுல் காந்தி
    X

    அவையில் எலியும் பூனையும்... தேனீர் விருந்தில் வணக்கம் சொல்லி, புன்னகைத்த பிரதமர் மோடி- ராகுல் காந்தி

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.
    • பிரதமர் மோடி மற்றும் ஓம் பிர்லா தலைமையில் தேனீர் விருந்து நடைபெற்றது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கியது. வரும் திங்கட்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெற இருந்தது.

    ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்றுடன் சபை நிறைவடைவதாக அறிவித்து அத்துடன் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் அறிவிக்கப்படாத தேனீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கனிமொழி எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ஷோபா ஒன்றில் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் அமர்ந்திருக்க, பிரதமருக்கு இடது பக்கம் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். வலது பக்கம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

    ராகுல் காந்தில் வந்தபோது பிரதமர் மோடியும் அவரும் பரஸ்பர நமஸ்காரம் (வாழ்த்து) தெரிவித்துக் கொண்டதாகவும், போட்டோவுக்கு இருவரும் புன்னகையுடன் போஸ் கொடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக என்டிடிவி செயதி வெளியிட்டுள்ளது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாமரை வடிவிலான சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் அச்சம் என்ற சக்கரவியூகத்தில் மக்களை சிக்கவைத்துள்ளனர். தற்போதைய நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

    Next Story
    ×