search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலைகள்: சொன்னதோடு மட்டுமல்லாம் களத்தில் இறங்கிய அதிஷி
    X

    தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலைகள்: சொன்னதோடு மட்டுமல்லாம் களத்தில் இறங்கிய அதிஷி

    • தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலை திட்டத்தை டெல்லி அதிஷி அரசு முன்னெடுத்துள்ளது.
    • இன்று காலை 6 மணிக்கு அதிஷி மற்றும் அமைச்சர்கள் சாலைகளை ஆய்வு செய்தனர்.

    டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள அதிஷி நேற்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத வகையில் சாலைகள் தரம் உயர்த்தப்படும். டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையில் தெருவில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை அதிஷி உள்ளிட்ட டெல்லி மாநில மந்திரிகள் தெருக்களில் உள்ள மோசமான சாலைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஒட்டுமொத்த டெல்லி அரசின் அமைச்சரவை காலை ஆறு மணியில் இருந்து சேதம் அடைந்த சாலைகளை ஆய்வு செய்தோம். மோடி மில் பிளைஓவர், என்.எஸ்.ஐ.சி. ஒக்லா, சிராக் டெல்லி போன்ற இடங்களில் சேதம் அடைந்த சாலைகளை சரி செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் "சாலைகள் மோசமான இருந்தன. மக்கள் சாலைகளில் உள்ள பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வந்தனர். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்ய வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரவிந்த் கெஜ்ரிவால் வழிக்காட்டுதலின்படி தீபாவளிக்குள் பள்ளம் இல்லாத சாலைகள் என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

    டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கிழக்கு டெல்லியில் உள்ள பத்பார்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பாக பரத்வாஜ் கூறுகையில் "டெல்லியில் அதிகமான மழை பெய்தது. இந்த பகுதியில் அனைத்து சாலைகளிலும் பள்ளம் இல்லாமல் உள்ளது. ஆனால், தண்ணீர் தேங்கியதால் 50 மீட்டர் சாலை சேதமடைந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். நாங்கள் வீதியில் இறங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இதை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றார்" எனக் கூறினார்.

    வட கிழக்கு டெல்லி, யுமுனா விஹார், வாசிராபாத் சாலை போன்ற இடங்களில் மந்திரி கோபால் ராய் சாலைகளை ஆய்வு செய்தார். "எங்களுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டும்" என்றார்.

    முன்னதா,

    டெல்லி முதலமைச்சர் அதிஷி நேற்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

    திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

    அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×