search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து பயங்கர விபத்து.. 3 பேர் பலி - பரபரப்பு வீடியோ
    X

    புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து பயங்கர விபத்து.. 3 பேர் பலி - பரபரப்பு வீடியோ

    • ஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உடன் அருகில் உள்ள ஹெபேடில் இருந்து புறப்பட்டது
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சியினுடையது என்று தெரியவனத்துளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் உள்ள பவ்தன் [Bavdhan] பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் இன்று [அக்டோபர் 2] அருகில் உள்ள ஹெலிபேடில் இருந்துஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் காலை 6.45 மணியளவில் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தீப்பிடித்திடுத்துள்ளது.

    இந்த விபத்தில் மூவரும் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சியினுடையது என்றும் புனேவில் இருந்து மும்பையை நோக்கி அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீஸ் நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் விபத்து தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×