search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்ட திட்டமில்லை- மத்திய அரசு விளக்கம்
    X

    முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்ட திட்டமில்லை- மத்திய அரசு விளக்கம்

    • தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.
    • அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என பாராளுமன்றத்தில் ஜல்சக்தி துணை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில், முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட, நிதி ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேரள எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த துணை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, அணைகளின் பாதுகாப்பு என்பது அணையின் உரிமையாளர்களான மாநில அரசுகளின் வசமே உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், அணையின் உரிமையாளராக தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

    அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய நிலையில் 152 அடியாக உயர்த்த முடியாது.

    அணையின் உரிமையாளரான தமிழக அரசின் நீர்வாளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது" என்றார்.

    Next Story
    ×