search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டி-சீரிஸ் இணை உரிமையாளரின் 20 வயது மகள் புற்றுநோய்க்கு பலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டி-சீரிஸ் இணை உரிமையாளரின் 20 வயது மகள் புற்றுநோய்க்கு பலி

    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இதற்கிடையே, டி-சீரிஸ் இணை உரிமையாளரும், நடிகருமான கிருஷண்குமாரின் மகள் தீஷா குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

    20 வயதான தீஷா மும்பையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஜெர்மனியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தீஷா நேற்று உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புற்றுநோய்க்கு இளம்பெண் பலியானது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×