search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

    • சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 7 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் வருகிற 13-ந்தேதி வரை டெல்லியில் தங்கி இருக்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் யாரை எல்லாம் எப்போது சந்தித்து பேசுவார் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தற்போது நிலவக்கூடிய அரசியல் சூழல், தமிழக அரசுடன் ஏற்பட்டு வரும் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விவாதித்ததாக தெரிகிறது.

    குறிப்பாக தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீதான சி.பி.ஐ. உள்ளிட்ட வழக்குகளின் தன்மை குறித்தும் அதன்மீது விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியது குறித்தும் அந்த கடிதத்தின் மீது என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அதேபோல அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்துமே மத்திய மந்திரி உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய விவரங்கள் ஆகும்.

    உள்துறை அமைச்சகம் மூலம் தான் இந்த விஷயங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கொண்டு செல்லப்படும்.

    அந்த அடிப்படையில் அரசு சார்ந்த மற்றும் அரசுடனான மோதல் போக்கு சார்ந்த அனைத்து விஷயங்களையும் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவாக விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் கவர்னரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் அரசுடன் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன? மோதல் போக்கை தணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    தமிழக அரசின் மீது பல்வேறு விஷயங்கள் குறித்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து கவர்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பான விஷயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையும் சந்திப்பதற்கு திட்டம் வைத்து இருப்பதாகவும் தெரிகிறது.

    கவர்னர் ஆர்.என்.ரவி வழக்கமாக மாதம் ஒருமுறை டெல்லிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் 7 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கிறார்.

    அதிலும் மிகவும் முக்கியமாக இந்த முறை அவரது நிகழ்ச்சி நிரல் எதையும் அரசு அதிகாரிகளிடம் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

    Next Story
    ×