search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய அரசை வாழ்த்த வரும் திருநங்கைகள்- பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
    X

    புதிய அரசை வாழ்த்த வரும் திருநங்கைகள்- பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு

    • திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.
    • பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்.

    3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திருநங்கைகளைச் சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி விழாவுக்கு முன், பாஜக எம்பியும், முன்னாள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சருமான வீரேந்திர குமார் சமூகத்தினரை தனது இல்லத்தில் வரவேற்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் 'அனைவரின் ஆதரவும், அனைவரின் நம்பிக்கையும், கூட்டு முயற்சியும்' என்ற அழைப்பின் ஒரு பகுதி.

    விழாவில் திருநங்கைகளை பிரதமரின் உள்ளடக்கிய செய்தியை மேம்படுத்துவதாகும். திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.

    பதவியேற்பு விழாவிற்கு திருநங்கைகள் முறைப்படி அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.

    உபி பாஜக பிரிவைச் சேர்ந்த சோனம் கின்னார், புதிய அரசாங்கத்திற்கு ஆசி வழங்குவதற்காக 50 சமூக உறுப்பினர்களுடன் இங்கு வந்துள்ளனர்.

    ஜாதி அடிப்படையிலான அரசியலால் பிரதமர் மோடி எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்" என்றார்.

    Next Story
    ×