search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அரியானாவில் பஸ் மீது லாரி மோதி 7 தொழிலாளர்கள் பலி
    X

    அரியானாவில் பஸ் மீது லாரி மோதி 7 தொழிலாளர்கள் பலி

    • அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றார்.
    • லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

    அம்பாலா:

    உத்தரபிரதேசத்தில் இருந்து இமாசலபிரதேச மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×