search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 272 இடங்களை தாண்டவில்லை என்றால்... மனம் திறந்த அமித்ஷா
    X

    வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 272 இடங்களை தாண்டவில்லை என்றால்... மனம் திறந்த அமித்ஷா

    • தனி நாடு என யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்

    பிளான் ஏ வெற்றி பெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே திட்டம் பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×