என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வயநாடு சீரமைப்பு பணிகள்- மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி கேட்கும் கேரளா
- நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும்.
வயநாடு:
நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என தெரிவித்தனர்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தனர்.
வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்