search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டர் கொலை:  வீதியில் இறங்கும் மம்தா பானர்ஜி ... பேரணியை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ்
    X

    பெண் டாக்டர் கொலை: வீதியில் இறங்கும் மம்தா பானர்ஜி ... பேரணியை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ்

    • உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    • பாஜகவும் இன்று பேரணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கால்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

    நாடு முழுவதும் பலவேறு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கல்கத்தாவில் இன்று மாலை மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    முன்னதாக மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் மடை மாற்ற முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்கள் மூலம் இணையத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக பேரணி அறிவித்துள்ள நிலையில், மம்தாவும் மாலையில் பேரணி நடத்த உள்ளார். கல்கத்தாவின் மவ்லாலி தொடங்கி தர்மஸ்தலா வழியாக இந்த பேரணியை நடத்த உள்ளார் மம்தா.

    வழக்கு இப்போது சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில் நியாமான விரைவான நீதியை வலியுறுத்தி மம்தா இந்த பேரணியில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×