search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    video viral
    X

    தெருக்களில் 'டவல்' கட்டி நடந்து சென்ற பெண்

    • வைரலான வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த தனுமிதா என்ற பெண் தெருக்களில் 'டவல்' மட்டும் கட்டிக்கொண்டு நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    பின்னணியில் தௌபா... தௌபா பாடல் ஒலிக்க தனுமிதா டவல் அணிந்தவாறு நடந்து செல்கிறார். பொது இடத்தில் இவ்வாறு நடந்து சென்ற அவரை பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள், பாதசாரிகள் என பலரும் பார்த்து திகைத்தனர். பின்னர் அவர் திடீரென தனது டவலை எடுத்து வீசினார். அப்போது அவர் ஆடை அணிந்திருந்தது தெரிய வந்தது.

    இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது. வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். பல பயனர்கள், அவரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×