search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு- இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு
    X

    வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு- இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு

    • இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
    • பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று மோதின.

    இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதைதொடர்ந்து, வெண்கலம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

    மேலும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×