search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.
    • அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அனுஜ் ராவத், கரண் ஷர்மா, ஸ்வப்னில் சிங் மற்றும் ஆர்சிபி உதவி ஊழியர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறி விட்டன. மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என கருத்துக்கள் வெளியாகி வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் மே 18-ந் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என நேற்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 ஆண்டுகளாக மே 18-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளதாக ரெக்கார்ட் சொல்கிறது. 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி 56, 27 ரன்கள் எடுத்துள்ளார்.

    மேலும் 2016-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக விராட் சதம் அடித்தார். அந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல 2023-ம் ஆண்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி சதம் அடித்தார். அதிலும் ஆர்சிபி அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இதனால் மே 18 ஆர்சிபி அணிக்கு சாதகமாக உள்ளதாகவும் இதன் மூலம் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

    • ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை நாளை எதிர் கொள்கிறது.

    ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் கொல்கத்தா அணி மட்டும் அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் உருவத்தை கேரள ரசிகர் ஒருவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தத்துருவமாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

    • அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ரிசர்வ் வீரர்களாக அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்காளதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி வங்காளதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வங்காளதேச அணி விவரம்:-

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

    ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்

    • லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.

    அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

     


    தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • டிக்கெட் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. லீக் சுற்றை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற பரபரப்பான கட்டத்தில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பிளே ஆஃப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மே 14 ஆம் தேதி (இன்று) மாலை ஆறு மணிக்கு துவங்குகிறது. இதில் ருபே கார்டு பயன்படுத்துவோர் டிக்கெட் வாங்கிட முடியும். நாளை (மே 15) மாலை 6 மணிக்கு பிளே ஆஃப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் ருபே அல்லாத மற்ற கார்டுகளை பயன்படுத்துவோர் கலந்து கொள்ளலாம்.

    ஐ.பி.எல். 2024 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ருபே கார்டு பயன்படுத்துவோர் மட்டும் டிக்கெட் வாங்கிட முடியும். மே 21 ஆம் தேதி ருபே அல்லாத மற்ற கார்டு பயன்படுத்துவோர் டிக்கெட் வாங்கிட முடியும். 

    • ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

    இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம்.

    மும்பை:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையே, டிராவிட் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடியவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 16-ந் தேதி எதிர் கொள்கிறது.
    • 14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத வேண்டிய 63-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் குஜராத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டது.

    ஏற்கனவே 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து இருந்தன. 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 16-ந் தேதி எதிர் கொள்கிறது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 'டாப்2' இடத்தை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை 63 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 7 லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 3 அணிகள் வெளியேற்றப்பட்டன. பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.

    டெல்லி-லக்னோ இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். பிளேப் ஆப் சுற்றுக்கான போட்டியில் உள்ள அணிகள் பற்றிய விவரம்:-

    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயலர்ஸ் 16 புள்ளிகளுடன் இருக்கிறது. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த இரண்டிலும் தோற்றாலும் அந்த அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு பாதிக்காது. ஏனென்றால் அந்த அணியின் ரன்ரேட் அபாரமாக உள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்க அந்த அணி ஏதாவது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும்.

    14 புள்ளிகளுடன் இருக்கும் ருதுராஜ் கொய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 18-ந்தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது.


    தோற்றால் மற்ற அணிகள் முடிவை பொறுத்து தலைவிதி இருக்கும். பெங்களுரிடம் தோற்றாலும் அந்த அணியை விட ரன்ரேட்டில் குறைந்து விடாமல் பார்க்க வேண்டும். சி.எஸ்.கே. விளையாடிய பிறகு தான் ஐதராபாத் அணி கடைசி லீக்கில் விளையாடுகிறது. இதனால் பிளேஆப் சுற்றில் நுழைய பெங்களூர் அணியை வீழ்த்துவது கட்டாயமாகும்.

    14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது. குஜராத்துடனும், பஞ்சாப்புடனும் (19-ந்தேதி) மோத இருக்கிறது. இதில் ஒரு வெற்றியை பெற்றாலேயே கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த அணியின் ரன்ரேட் லக்னோவை விட சிறப்பாக இருக்கிறது. 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்துக்கான போட்டிக்கு வரும். 2 போட்டியிலும் தோற்றால் பாதிப்பு ஏற்படலாம்.

    அதே நேரத்தில் கடைசி லீக்கில் ஆடுவதால் அதற்கு ஏற்றவாறு விளையாடும். இதனால் அந்த அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களுரு அணி தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வென்று முத்திரை பதித்தது. கடைசி லீக்கில் சென்னையை வீழ்த்தினால் 14 புள்ளிகளை பெறும். அதே நேரத்தில் ஐதராபாத்தும், லக்னோவும் 16 புள்ளிகளை எடுத்தால் வாய்ப்பை இழந்துவிடும்.


    சென்னையுடன் மோதும் போட்டி நாக்அவுட் ஆகும் வகையில் மற்ற முடிவுகள் இருந்தால் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற (200 ரன் எடுத்தல்) வேண்டும். அப்படி நடந்தால் சென்னையை விட ரன்ரேட்டில் முன்னிலை பெறும்.

    12 புள்ளியுடன் இருக்கும் லக்னோ எஞ்சிய ஆட்டங்களில் டெல்லி, மும்பையுடன் மோத வேண்டும். ரன் ரேட் மோசமாக இருப்பதால் 16 புள்ளிகள் பெற இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளும் 16 புள்ளியை எடுக்கும் போது ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும். லக்னோவின் ரன் ரேட்-0.769 ஆகும்.

    12 புள்ளிகளுடன் இருக்கும் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி இன்றைய ஆட்டத்தில் லக்னோவிடம் தோற்றால் வெளியேறிவிடும்.

    மேலும் வெற்றி பெற்றாலும் பிளேஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் ஐதராபாத், சென்னை அணிகளுடன் ஒப்பிடுகையில் ரன்ரேட் குறைவாக இருக்கிறது. லக்னோவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அது சாத்தியமற்றது.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனையை தேர்வுசெய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.
    • சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கு வழங்கப்பட்டது.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

    ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ கேப்டனான முகமது வாசிம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிமுக்கும், சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    • நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
    • நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின.

    அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தற்போதுவரை அணியினருடன் இணையவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 460 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது

    • நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
    • சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக வந்த சுரேஷ் ரெய்னாவிடம், அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அப்போது சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இல்லை என்று கூறினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×