search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டேரில் மிட்செல் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 22 ரன்களையும், மொயின் அலி 10 ரன்களையும், ஷிவம் தூபே 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    18.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 42 ரன்களை குவித்தார்.

    ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துகிறார்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அடுத்த மூன்று அணிகள் எவை என்பதை நிர்ணயிக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை ரிங்கு சிங் புகழ்ந்துள்ளார்.

    உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் அன்னையர் தினத்தை ஒட்டி, தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் பகிர்ந்துள்ளார்.

    அதில் 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை அவர் புகழ்ந்துள்ளார்.

    • போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
    • சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

    சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

    இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

    • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
    • இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முகமதுல்லா 54 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானியும் பிரையன் பென்னட்டும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில், தடிவானாஷே மருமணி 1 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஜோடி சேர்ந்த பிரையன் பென்னட்டும் சிக்கந்தர் ராசாவும் வங்கதேச பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்து பிரையன் பென்னட் அவுட் ஆனார். சிக்கந்தர் ராசா 76 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என வங்கதேசம் கைப்பற்றியிருந்த நிலையில், 5வது டி20யில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

    • சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 13 தடவையும் வென்று இருக்கின்றன.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

    சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு பிரச்சினையின்றி முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் ஒன்றில் மட்டும் வென்றால் ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும்.

    சென்னை அணி ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதில் 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 196 ரன்னில் அடங்கியது. இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (63 ரன்), மொயீன் அலி (56 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. ஒரு ரன்னில் ஏமாற்றம் அளித்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே, ரச்சின் ரவீந்திரா நிலைத்து நின்று நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 541 ரன்), ஷிவம் துபே (371 ரன்) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் துஷர் தேஷ்பாண்டே தவிர வேறு யாரும் விக்கெட் வீழ்த்தவில்லை. முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகியதாலும், தீபக் சாஹர் காயத்தால் ஒதுங்கியதாலும் பந்து வீச்சில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

    ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றை (பிளே-ஆப்) நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும். முதல் 9 ஆட்டங்களில் 8 வெற்றியை பெற்ற வலுவான அந்த அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து போராடி வீழ்ந்தது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 471 ரன்கள்), ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 436 ரன்), ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வாலும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா, அஸ்வினும் வலுசேர்க்கிறார்கள்.

    அடுத்த சுற்றுக்குள் நுழைய ராஜஸ்தான் அணியும், அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த சென்னை அணியும் தீவிரமாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த மோதலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் சென்னை அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்றாலும் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் ராஜஸ்தானை சாய்க்க முடியும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 13 தடவையும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, மிட்செல் சான்ட்னெர் அல்லது சிமர்ஜீத் சிங், ஷர்துல் தாக்குர், துஷர் தேஷ்பாண்டே.

    ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சுபம் துபே, டோனவன் பெரீரா, ரோமன் பவெல் அல்லது கேஷவ் மகராஜ், அஸ்வின், அவேஷ் கான் அல்லது யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 22 பந்தில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸல், ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானாவின் அதிரடியால் 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு முனையில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாட ரோகித் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 22 பந்தில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ரோகித் 24 பந்துகளில் 19 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 11, பாண்ட்யா 2, டிம் டேவிட் 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸல், ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை நரைன் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் கிளீன் போல்டு ஆனார். இதன்மூலம் நரைன் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    அவர் 44-வது முறையாக டக்அவுட் ஆகி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் அலெக்ஸ் ஹால்ஸ் 43 முறை டக்அவுட் ஆகி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுனில் நரைன் அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.

    அதிகமுறை டி20-யில் டக்அவுட் ஆன வீரர்கள்:

    சுனில் நரைன் (44)

    அலெக்ஸ் ஹால்ஸ் (43)

    ரஷீத் கான் (42)

    பால் ஸ்டிர்லிங் (32)

    கிளென் மேக்ஸ்வெல் (31)

    ஜேசன் ராய் (31)  

    • 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, பும்ரா, காம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஓவர்கள் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரில் சால்ட் 6 ரன்னிலும் 2-வது ஓவரில் சுனில் நரைன் டக் அவுட்டிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் ரானா 33 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ரஸல் 24 ரன்களிலும் ரிங்கு சிங் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ×