search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 4 இடங்களை வகிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மல்லுகட்டுகின்றன.

    புதுடெல்லி, மே 7-

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது.இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடு வார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்னிலும் ரோகித் 4, நமன் 0 என விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சூர்யகுமார் யாதவ் 102 ரன்னிலும் திலக் வர்மா 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • வங்கதேச அணி 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்தது.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷஃபாலி வர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா மற்றும் தயாளன் ஹேமலதா இருவரும் தலா 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் மழை காரணமாக இப்போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய ரிச்சா கோஷ் 24 ரன்களையும், சாஜனா 8 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 14 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது.

    இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணிக்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் முர்ஷிதா கதும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 21 ரன்களுக்கும், ருபாய ஹைதர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா, சொர்மா அக்தர், ரிடு மோனி, ரபேயா கான் என அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஷொரிஃபா கதும் 11 ரன்களையும், நஹிதா அக்தர் 2 ரன்களையும் சேர்த்த நிலையிலும் வங்கதேச அணி 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்திய அணி ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பைக்கான தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெர்சி ஹெலிகாப்டரில் தொங்க விட்டு தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் வருவது போல வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை ரோகித் சர்மா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    இதனை பார்த்த ரசிகர்கள் இந்திய ஜெர்சியிலேயும் காவியை கொண்டு வந்து விட்டீர்களா என ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் இந்திய அணியின் பயிற்சி ஜெர்சியை காவி நிறமாக மாற்றினர். பின்னர் இந்திய ஜெர்சியை மாற்றி விட்டார்கள் எனவும் எதற்கு கொஞ்சம் கொஞ்சமாக காவியாக மாற்ற வேண்டும் முழுவதுமாக மாற்ற வேண்டியது தானே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    • ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடும்.

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    • திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மின்னு மணி மற்றும் எஸ் சஜனா ஆகியோருக்குப் பிறகு பெண்கள் டி20-யில் இடம் பிடித்த கேரள வீராங்கனை ஆவார்.
    • 4-வது டி20-யில் கேரளாவை சேர்ந்த சஜனா மற்றும் ஆஷா இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்களாதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த போட்டியில் இந்திய அணியில் 33 வயதான ஆஷா சோபனா இடம் பெற்றார். இதன் மூலம் டி20-யில் அறிமுகமாகும் வயதான இந்தியப் பெண் என்ற பெருமையை கேரள வீராங்கனையான சோபனா பெற்றார்.

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மின்னு மணி மற்றும் எஸ் சஜனா ஆகியோருக்குப் பிறகு பெண்கள் டி20-யில் இடம் பிடித்த கேரள வீராங்கனை ஆவார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20-யில் சஜனா அறிமுகமானார். இன்று நடக்கும் 4-வது போட்டியில் சஜனா மற்றும் ஆஷா இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்திய ஆடவர் டி20 அணிக்காக அறிமுகமான அதிக வயதானவர் ராகுல் டிராவிட். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக டிராவிட் விளையாடியபோது அவருக்கு வயது 38 வயது 232 நாட்கள். இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களம் இறங்கியபோது அவருக்கு வயது 33 வயது 221 நாட்கள் ஆகும்.

    • ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர்.
    • நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பதில் அளித்துள்ளார். அதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

    அதில், உங்களின் சொந்த மைதாங்களில் ரசிகர்களை வரவைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் தரம்சாலா மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகள்தான் நிறைந்திருந்தது என ரசிகர் ஒருவர் X தளத்தில் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது:- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர். நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    இவ்வாறு கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம்.
    • அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தம்முடைய கெரியரிலேயே முதல் முறையாக 9-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

    இந்நிலையில் 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருவேளை 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் டோனி விளையாடக் கூடாது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் டோனியை போல் ஷாட்டுகளை அடித்ததில்லை. எனவே டோனி ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

    அவருடைய அனுமதியின்றி சி.எஸ்.கே. அணியில் எதுவும் நடக்காது. எனவே டோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்டபோது கடந்த போட்டிகளில் அசத்திய டோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று (அதாவது நேற்று) சி.எஸ்.கே. வெற்றி பெற்றாலும் நான் டோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்.

    என்று ஹர்பஜன் கூறினார்.

    • கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன.
    • சென்னை, சன்ரைசர்ஸ், லக்னோ தலா ஆறு வெற்றிகள் பெற்றுள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

    இதனால் புள்ளிகள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இரண்டு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் (NRR) அடிப்படையில் கொல்கத்தா முதலிடம் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடம் பிடித்துள்ளது.

    5-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதுவரை 3-வது இடத்தில் இருந்து லக்னுா 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6-வது இடத்தில் உள்ளது. 10 அணிகள் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கவில்லை.

    • முகமது அமிர் 2010-ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சிறைத்தண்டனை பெற்றார்.
    • இதனால் அயர்லாந்து அவரது விசாவை தடை செய்தது.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவர் ஏற்கனவே அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அயர்லாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் இன்று காலை அயர்லாந்து புறப்பட்டனர்.

    ஆனால் முகமது அமிர் மட்டும் புறப்படவில்லை. முகமது அமிர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றார். அப்போது அயரலாந்து அவரது விசாவுக்கு தடைவிதித்திருந்தது. தற்போதும் அது நடைமுறையில் இருக்கிறது. இதனால் உடனடியாக விசா அவருக்கு கிடைக்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள் விசா கிடைத்துவிடும். அதன்பின் அணியுடன் முகமது அமிர் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2018-ம் ஆண்டும் இதுபோன்ற பிரச்சனை முகமது அமிருக்கு ஏற்பட்டது. பின்னர் விசா வழக்கப்பட்டது. பாகிஸ்தான்- அயர்லாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மே 10-ந்தேதி நடக்கிறது.

    2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முகமது அமிர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×