search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார்.
    • ஸ்வப்னில் சிங், சிராஜ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்களான ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடனும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்
    • பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    அண்மையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடி ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி க்ரிஸ்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மே 22 முதல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
    • அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்

    இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

    ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 10-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 10-வது இடத்தில் உள்ளது.

    குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், பெங்களூரு அணி பலம் பொருந்திய ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 1-ல் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

    • ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார்-யார்? இடம் பெறுவார்கள்? என்று முன்னாள் வீரர்கள் நாள் தோறும் கணித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு குறித்து அணி தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.

    இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா-தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியானது.

    அதன்படி ரோகித் சர்மாவும் ரோகித் சர்மாவும் அகர்கரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதிப்புக்கு பிறகு வீரர்களின் தேர்வு இறுதி செய்யப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வீராட் கோலி இடம் பெறுவார். அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வீரராக ஆடுவாரா? என தெரியவில்லை.

    சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ரிங்குசிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகி ஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவை உள்ளன. அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும் 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    • ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது.
    • ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டித் தொடரின் 46-வது 'லீக்' ஆட்டமாகும். சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது போட்டியாகும்.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 84 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் தோற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது அவசியமாகும்.

    ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.


    இன்றைய போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியதாவது:-

    சேப்பாக்கம் மைதானத் தில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்சின் சாதனை நன்றாகவே இருந்தது. ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கிறது. கடந்த சில ஆட்டத்தில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக கருதுகிறேன். பனியின் தாக்கம் சி.எஸ்.கே. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் வீச இயலவில்லை.

    ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் ஆடி வருகிறார். தற்போது 4-வது வீரராக ஆடி வருகிறார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு களம் இறக்கப்படும் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல் படுகிறார்.

    ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாம்சன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • துருவ் ஜூரல் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். ஆனால் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.

    அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ரன்கள் அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ரன்கள் சேர்த்திருந்தது.

    கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அ அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.

    18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ரன்கள் அடித்தார்.

    கடைசி மூன்று ஓவரில் குறைவான ரன்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 24, பட்லர் 34 என வெளியேறினர். அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து சாம்சன்- ஜூரல் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லக்னோ தரப்பில் யாஷ் தாகூர், ஸ்டோய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • தீபக் ஹூடா 31 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 76 ரன்கள் அடித்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். ஆனால் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.

    அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ரன்கள் அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ரன்கள் சேர்த்திருந்தது.

    கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அ அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.

    18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ரன்கள் அடித்தார்.

    கடைசி மூன்று ஓவரில் குறைவான ரன்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. 

    • டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மெக்கர்க் (27 பந்தில் 84 ரன்), ஸ்டப்ஸ் (25 பந்தில் 48 ரன்), ஷாய் ஹோப் (17 பந்தில் 41 ரன்) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது.

    பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ரன்கள் குவிக்க திணறியது. இஷான் கிஷன் 14 பந்தில் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆறு ஓவரில் 65 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றபோதிலும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 2 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்தது.

    அந்த நேரத்தில்தான் 18-வது ஓவரின் 4-வது பந்தில் டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ரிசிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா எதிர்கொண்டார். முகேஷ் குமார் இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது திலக் வர்மா ரன்அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். அத்துடன் மும்பை அணியின் நம்பிக்கை வீணானது.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

    • மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரேசர் மெக்கர்க்- பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    3-வது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் மெக்கர்க் 3 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மெக்கர்க் 15 பந்தில் அரைசதம் விளாசினார். மேலும் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 14 ரன் கிடைத்தது.

    5-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் இரணடு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 20 ரன் கிடைத்தது.

    6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி அணி பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது.

    ஹர்திக் பாண்ட்யா வீசிய 7-வது ஓவரில் பொரேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்கர்க் ஒரு சிக்ஸ் அடித்தார். ஓவர் த்ரோ மூலம் ஐநது ரன்கள் கிடைக்க டெல்லி 21 ரன்கள் குவித்தது.

    அடுத்த ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மெக்கர்க் ஆட்டமிழந்தார். மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார். இவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி 7.3 ஓரில் 114 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் ரன் உயர்வு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பொரேல் 27 பந்தில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 12 ஓவரில் 150 ரன்னைத் தாண்டியது. ஷாய் ஹோப் ஐந்து சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.1 ஓவரில் டெல்லி அணி 100 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரை வுட் வீசினார். இந்த ஓவரில் ஸ்டப்ஸ் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் விறாசினார்.

    19-வது ஓவரை பும்ரா வீசினார். இநத் ஓவரில் ரிஷப் பண்ட் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் 6 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • சி.எஸ்.கே.வுக்கு எதிராக 2-வதாக ஆடியே வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்.

    17- வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 4 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 3-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட்) பெற்றது. ஒன்றில் (லக்னோ 6 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நாளை (28-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது ஆட்டம் இதுவாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற் றொரு கோலாகலத்துக்கு தயாராகி விட்டனர்.

    ஐதராபாத்தில் கடந்த 5- ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிதீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் 210 ரன் குவித்தும் சென்னை அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். பந்துவீச்சும், பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு நுழைய இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவது அவசியமாகும்.

    பேட்டிங்கில் ஷிவம் துபே 22 சிக்சர்களுடன் 311 ரன்னும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 சதம், 2 அரை சதத்துடன் 349 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 12 விக்கெட்டும், பதிரனா 11 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இருக்கிறார்.

    ரகானே தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். நாளைய போட்டிக்கான அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 3- வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இந்த தொடரில் ஐதராபாத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் சாதனைகளை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்தால் அந்த அணி ஸ்கோரை அதிகமாக குவித்து விடுகிறது. அதே நேரத்தில் 2- வது பேட்டிங் செய்யும் போது திணறி விடுகிறது.

    சி.எஸ்.கே.வுக்கு எதிராக 2-வதாக ஆடியே வெற்றி பெற்றது. இதனால் சேப்பாக்கத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட் (325 ரன்), அபிஷேக் சர்மா (288), கிளாசன் (275), ஷபாஸ் அகமது உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் டி.நடராஜன் (12 விக்கெட்), கேப்டன் கம்மின்ஸ் (10) நல்ல நிலையில் இருக்கிறார்கள். இரு அணிகளும் 20 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 14-ல், ஐதராபாத் 6-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×