search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • Abhishek Sharma will be ready for India in six months Yuvraj Singh
    • ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா யார் பந்து வீசினாலும் சிக்சர், பவுண்டரி விளாசுகிறார். டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பவர்பிளேயில் எதிரணியை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

    இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்டசத்திர ஆல்ரவுண்டர் யுராவஜ் சிங் கூறுகையில் இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கப் பிறகு, அவர் இந்தியாவுக்காக விளையாட தயாராக வேண்டும். இதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரும் ஆறு மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.

    அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.

    பெரிய ஷாட்டுகள் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இவர் பெரிய ஷாட் அடிப்பது சிறந்தது. ஆனால், ரொட்டேட் ஸ்டிரைக் செய்வதற்கு சிங்கிள் எடுப்பது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்வது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து அவர் அதிக நம்பிக்கை பெற்றுக் கொண்டிருப்பார். தற்போது டிராவிஸ் உலகத்தரம் வாய்ந்த வீரர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். சிறந்த தொடக்கத்தை எப்படி மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவது என்பதை கற்றுக் கொள்ள அபிஷேக் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதைத்தான் அவர் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது.
    • ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் அன்றைய தினம் அவர்களுடையதாக அமையவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் கிளாசன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி ஆர்சிபி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை பதிவு செய்தது.

    நேற்று மீண்டும் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இதில் எப்படியும் 300 ரன்கள் குவிக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் பரிதாபப்பட்டனர்.

    ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. 207 இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா பவர்பிளேயில் விளாசி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் அசத்த சன்ரைசர்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும், மார்கிராம், 7 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும், கிளாசன் 7 ரன்னிலும் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் எடுத்து யாஷ் யதாள் பந்தில் ஆட்டமிழந்தார்.

    300 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், 207 இலக்கை எட்ட முடியவில்லையே என ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடக்க வீரர்களிடம் 14 போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெட்டோரி கூறியதாவது:

    எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய நாள் (நேற்று) அவர்களுடையதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற நாட்கள் அமையும். 14 போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக நாங்கள் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதரவு பெற முடியவில்லை.

    இது கடினமான தோல்விதான். என்றால், எந்த அணியும் எந்த அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்கடிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஐபிஎல் எந்த போட்டியில் எளிதாக போட்டி என்பது கிடையாது.

    இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 சிக்சர்களும், ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் 22 சிக்சர்களும்,
    • டெல்லிக்கு எதிராக 22 சிக்சர்களும் விளாசியது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த சீசன் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி அணிகளுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. ஆர்சிபி-க்கு எதிரான முதல் போட்டியில் 287 ரன்கள் குவித்தது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்னாகும்.

    நேற்று ஆர்சிபி-க்கு எதிராக 2-வது முறையாக மோதியது. இந்த போட்டியில் 207 இலக்கை எட்டமுடியாமல் 171 ரன்கள் எடுத்து 35 ரன்னில் தோல்வியை தழுவியது. ஆனால், இந்த போட்டியின் 2-வது ஓவரில் அபிஷேக் சர்மா சிக்ஸ் ஒன்று விளாசினார். இந்த சிக்ஸ் மூலம் இநத் ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் 100-வது சிக்ஸ் அதுவாகும்.

    இதன்மூலம் ஒரு சீசனில் 100 சிக்சர்களை முதன்முறையாக கடந்துள்ளது. இதற்கு முன்னதாக 2022 சீசனில் 97 சிக்சர்களும், 2016-ல் 89 சிக்சர்களும், 2018-ல் 88 சிக்சர்களும் அடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 சிக்சர்களும், ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் 22 சிக்சர்களும், டெல்லிக்கு எதிராக 22 சிக்சர்களும் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது.
    • கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஒரு சதம், மூன்று அரை சதம் அடித்தார்.

    ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.

    இந்த நிலையில் கோலி அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது. நீங்கள் இன்னிங்ஸின் 14 அல்லது 15-வது ஓவரில் அவுட் ஆனதும், உங்களது ஸ்டிரைக் ரேட் 118-ல் இருக்கிறது என்றால் அதை உங்களிடம் இருந்து அணி எதிர்பார்க்கவில்லை.

    கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது. உங்களுக்கு அடுத்து தினேஷ் கார்த்திக், லோம்ரர் இருக்கிறார்கள். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறைதான் பெங்களூரு அணிக்கு தேவை. கோலி ஆட்டத்தை தவறவிடுகிறார். அவர் பெரிய ஷாட்களை முயற்சிக்க வேண்டும் என்றார்.

    • சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கோலி- பட்டிதாரின் அரை சதம் மற்றும் கேமரூன் க்ரீனின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த ஸ்கோரை ஐதராபாத் அணி எளிதாக எட்டிவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆர்சிபி. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 7, நிதிஷ் ரெட்டி 13, கிளாசன் 7, அபிஷேக் 31, சமத் 10 என விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதி கட்டத்தில் வந்த பேட் கம்மின்ஸ் 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரிகளை விளாசி 13 ரன்னில் வெளியேறினார். இறுதி வரை போராடிய ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அரை சதம் விளாசினார்.
    • அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் குவித்தனர்.

    அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.

    அந்தவகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு 505 ரன்களும், 2016 -ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.

    2019-ம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020-ம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021-ம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17-வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400-க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

    • நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன்.
    • ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான்.

    இந்திய அணியின் தலைசிறந்த இளம் வீரராக சுப்மன் கில் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது.

    இதில் சுப்மன் கில் போன்றோருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை தேர்வு குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விசயம். ஆனால், நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழைப்பதாகும். அதேபோல் எனக்கும் அநீதி இழைப்பதாகும்.

    நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன். ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான். என்னுடைய அணிக்கு சிறந்ததை பெற்றுக் கொடுப்பது, அணிக்காக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி சக வீரர்களுக்கு உதவி செய்வது குறித்துதான் கவனம் செலுத்துகிறேன்.

    கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய எனக்கு, எனது அனுபவங்கள் உண்டு. இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நான் இவ்வளவு தூரம் யோசிக்கவில்லை.

    நான் கடந்த சீசனில் கிட்டத்தட்ட 900 ரன்களை எடுத்துள்ளேன், என்னைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் எடுக்கப்படுவேன். இல்லையென்றால் (அப்படியானால்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • ஆர்சிபி அணியில் படித்தார் 20 பந்தில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. டுபிளிசிஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 6 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து கோலி- பட்டிதார் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய பட்டிதார் 20 பந்தில் 50 ரன்கள் விளாசி அவுட் ஆனார். மந்தமாக விளையாடிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேமரூன் க்ரீன்- தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள்.
    • இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக டோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது.

    உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7-வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.

    என்று சித்து கூறினார்.

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

    • இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 136 ஒருநாள் போட்டி மற்றும் 140 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தைப் பதிவு செய்யத் தவறிய போதிலும், பாகிஸ்தானுக்காக இரண்டு வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 21 அரை சதங்களுடன் 3369 ரன்களும் டி20 போட்டிகளில் 12 அரை சதங்களுடன் 2893 எடுத்துள்ளார்.

    2006-ல் 15 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், 2016-ல் டி20 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக 34 ஒருநாள் போட்டி (16 வெற்றி), 62 (27 வெற்றி) டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார். பாகிஸ்தான் பெண்கள் கேப்டன்களில் சிறந்த வெற்றி சதவீதத்தை இவர் படைத்துள்ளார்.

    பல காயங்களுடன் போராடிய போதிலும், பிஸ்மா மரூப் எட்டு உலகக் கோப்பைகளில் இடம்பெற்றார். மேலும் 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அணியில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.

    மரூப் தனது லெக்ஸ்பின் மூலம் 80 சர்வதேச விக்கெட்டுகளையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான் மிகவும் விரும்பும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எனது கிரிக்கெட் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    "என்னை நம்பி, எனது திறமையை வெளிப்படுத்தும் தளத்தை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    • பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி 379 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.
    • இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.

    பெங்களூரு அணி இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான். அளவுகடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்கள் ரசிகர்கள் குடும்பத்தின் அங்கமாக உள்ளனர்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    ×