search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது.
    • ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும்.

    வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் வங்கதேசம் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்துக்கு முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் உகூறியதாவது:-

    முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது. நீங்கள் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்தீர்கள். இரண்டாவதாக நம்முடைய வேக பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் நற்பெயர் முடிவுக்கு வந்துவிட்டது.

    இந்த தோல்வியை ஒரு நம்பிக்கை மீது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஆகும். இந்திய அணி ஆசியக் கோப்பையின் கடந்த ஆசியக் கோப்பையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் பலவீனத்தை வெளியில் காட்டிவிட்டது. இப்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

    நம்முடைய வேகப்பந்துவீச்சாளர்களின் வேகம் குறைந்து விட்டது. 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் வங்கதேசம் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை விட சிறப்பாக இருந்தார்கள். ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும். ஷான் மசூத் தற்பொழுது கேப்டனாக தோல்வியில் இருக்கிறார்.

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றுப் பொழுது சூழ்நிலை கடுமையாக இருந்தது என்று நினைத்தேன். பாகிஸ்தான் அணி அங்கு தொடரை வெல்வது சாத்தியம் கிடையாது. ஆனால் நீங்கள் இப்பொழுது சொந்த நாட்டில் வங்கதேசம் அணிக்கு எதிராக தோற்று இருக்கிறீர்கள். கேப்டனாக ஷான் மசூத் கண்டிஷனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

    மேலும் பிஎஸ்எல் மற்றும் கவுண்டி போட்டிகளில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ராவல்பிண்டி ஆடுகளத்தில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? என்று கூறியிருக்கிறார்.

    • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
    • இதுவரை 6 முறை உலகக்கோப்பையை ஆஸ்திரேலுயா அணி வென்றுள்ளது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது.

    வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.

    இதனையடுத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதுவரை 6 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியானது, ஏழாவது முறையாக மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

    அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

    அலிசா ஹீலி (கே), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்

    • வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன்.
    • என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த பரிசுத் தொகையை, வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன். எனவே, நான் அவர்களுக்கு இந்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்.

    வெளிநடுகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், இது இதுவரை என்னுடைய ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். மேலும் இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்ததில் இருந்து தீவிரமாக தயாராகினோம். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கு முன், இரண்டரை மாத இடைவெளி இருந்தது.

    மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வீரர்களுடன் அணியின் மற்ற வீரர்களும் நிர்வாகமும் அங்கு இருந்தனர். என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு ரஹிம் கூறினார்.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
    • இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    வங்கதேச அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றத்திற்குப் பிறகு வெளியான ஒரு வீடியோ, அந்த அணியின் ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    அந்த வீடியோவில், கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் தோளில் கை வைத்து பேசுகிறார். அப்போது ஷாகின், கேப்டனின் கையை தோளில் இருந்து தட்டிவிடுகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து சிலர் கேப்டனை அனைவர் முன்னிலையிலும் இவ்வாறு அவமதிப்பது அணிக்கு நல்லதல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டில் இதுபோன்ற செயல்களால் வெற்றிபெற முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானிடம் தொடர்ந்து 13 முறை தோல்வியை சந்தித்த வங்கதேசம் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 தோல்விகள் என்ற தொடர் தோல்வி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது.
    • கடைசி 20 ரன்களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 2-வது போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் அதானஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். ஷாய் ஹோப் 22 பந்தில் 41 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோவ்மேன் பொவேல் 22 பந்தில் 35 ரன்களும், ரூதர்போர்டு 18 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அந்த அணி 19.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    தொடக்க வீரர் ரிக்கெல்டன் 13 பந்தில் 20 ரன்களும், ஹென்ரிக்ஸ் 18 பந்தில் 44 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

    அடுத்து வந்த கேப்டன் மார்கிராம் 9 பந்தில் 19 ரன்களும், ஸ்டப்ஸ் 24 பந்தில் 28 ரன்களும் அடித்தனர். ஒரு கட்டத்தில் அதாவது ஸ்டப்ஸ் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 149 ரன்களில் சுருண்டது. கடைசி 20 ரன்களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்ததுடன் தொடரையும் இழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெப்பர்டு 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். மற்றொரு பந்து வீச்சாளர்கள் ஷமர் ஜோசப் 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:

    ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.

    முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

    ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
    • அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    லண்டன்:

    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நிடா தருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் நிடா தர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிடா தர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் விவரம் பின்வருமாறு:

    பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தர், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப் மற்றும் துபா ஹாசன்

    ரிசர்வ் வீராங்கனைகள்: நஜிஹா அலி, ரமீன் ஷமிம் மற்றும் உம்மி ஹனி

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்தது.
    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து அடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93 ரன்னிலும், மெஹிதி ஹசன் 77 ரன்னிலும், லிட்டன் தாஸ் 56 ரன்னிலும், மொமினுல் ஹக் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 51 ரன் எடுத்தார்.

    வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்
    • ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா வாழ்த்து

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

    38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

    டெஸ்ட் போட்டியில் 2018- ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    இந்நிலையில், ஷிகர் தவானுக்கு அவரது நெருங்கிய நண்பர் விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "ஷிகர் தவான், நீங்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்களது அற்புதமான புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் எப்போதும் வாழும்.

    நீங்கள் கொடுத்த நினைவுகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள் மற்றும் எப்போதும் உங்கள் இதயத்திடம் இருந்து வழிநடத்தியதற்காக நன்றி. மைதானத்திற்கு வெளியே உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளனர்.
    • இருவரும் பிரிந்தற்கான காரணம் குறித்து டைம்ஸ் நவ் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாஷாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    அண்மையில் ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர். இந்த தகவலை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    எதற்காக ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்தற்கான காரணம் குறித்து டைம்ஸ் நவ் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    அதில், "பிரபல மாடலான நடாஷாவின் வாழ்க்கை முறையும் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்க்கை முறையும் வித்தியாசமானதாக இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு தான் பாண்ட்யாவும் நானும் வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நடாஷா உணர்ந்துள்ளார்.

    பாண்ட்யா ஆடம்பரமாகவும் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் நபராக இருந்தது நடாஷாவிற்கு பிடிக்கவில்லை. இந்த பிரச்சனை இருவருக்கும் இடையே இடைவெளியை உருவாக்கியுள்ளது. இந்த இடைவெளி காலப்போக்கில் பெரிதாகி பிரிந்து வாழும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.
    • சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 144 போட்டிகளில் விளையாடி 12131 ரன்கள் குவித்துள்ளார்.

    33 வயதான ஜோ ரூட் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட்ட் கிரிக்கெட் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் 62 ரன்கள் அடித்து புதிய சாதனை ஒன்றை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த அரைசதத்தோடு ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்.

    ×