search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்தார்.
    • சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    டல்லாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 44 ரன்னும், ஷதாப் கான் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ரன்கள் எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ரன்களை எடுத்து, டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ரன்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ரன்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ரன்களுடன் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    • முதலில் ஆடிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது. ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர். மைக்கேல் லீஸ்க் 35 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    35 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    • பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
    • இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழந்து 18 ரன்களை குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

    அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

     


    2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப் அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.

    முன்னதாக, யு19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
    • விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.

    இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    • கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.
    • சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    டி20 உலகக் கோப்பைக்கு இடையே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.

    ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் அஞ்சலி செலுத்தி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    • கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.
    • அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களையும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.

    இதையடுத்து 160 என்ற இலக்கை துரத்திய அமெரிக்கா அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்கா அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அவுட் ஆனார்.

     


    இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

    19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலககக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது.

    • துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
    • சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

    ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிவம் துபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும்.

    மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம்.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    • உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    டல்லாஸ்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    • விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
    • இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

    நியூயார்க்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரின்போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன்.

    அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.

    இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

    என்று இயன் பிஷப் கூறினார்.

    • 2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார்.
    • ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்று வருகிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார். ஏதேனும் ஒரு அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சந்தேகம் என்றால் சொல்லி கொடுப்பார். ஆனால், ஸ்டெய்ன் யார் என்றே அடையாளத்தை முழுமையாக தெரியாத அமெரிக்க ஊழியர் ஒருவர், ஜாம்பவான் ஸ்டெய்னுக்கு சில பந்துவீச்சு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்டெயினும் தனக்கு எதுவும் தெரியாததுபோல், அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுகொண்டு தான் முதல்முறை பந்துவீசுவதுபோல் முயற்சி செய்தார்.

    இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீ படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் டா என்ற வசனத்தை முன் வைத்து கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர், அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதை இதன்மூலம் தான் தெரிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு அல்ல. இதனால்தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

    • மேக்ஸ்வெல் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
    • கிறிஸ் கெயில் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

    பார்படாஸ்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார். இதனை வார்னர் முறியடித்து இருக்கிறார்.

    அவர் 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். அவர், 27-வது அரை சதம் அடித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

    கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.

    மேலும் இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதில் 3 கோல்டன் டக் அவுட் ஆகும்.

    • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அரை சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

    இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×