search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்படுகின்றனர்.
    • டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்படுகின்றனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    • உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை.
    • நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2-வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை தமக்கு இடம் கிடைக்காததால் தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அரையிறுதியில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.

    ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை என்று கூறினார்.

    அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரிலும் 2024 சீசன் தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டுள்ள ரியான் பராக் சுயநலமாக நாட்டுப்பற்று இல்லாமல் பேசியுள்ளார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

    • ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018-ல் தேர்வானார்.
    • மும்பைக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.

    மகாராஷ்டிராவை சேர்ந்த கேதர் ஜாதவ் கடந்த 2007 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அந்த வாய்ப்பில் 2013-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் 1233 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். அதன் காரணமாக 2014-ம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்தார். அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதை மறக்க முடியாது.

    அந்தப் போட்டியில் 351 ரன்களை சேசிங் செய்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது விராட் கோலியுடன் சேர்ந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதமடித்து 120 (76) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதுவே அவருடைய கேரியர் சிறந்த செயல்பாடாகவும் அமைந்தது.

    அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018-ல் தேர்வான அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.

    அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறிய அவரை இந்தியா மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் கழற்றி விட்டது. அதனால் 39 வயதாகும் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் 2020-ல் டோனி ஓய்வு அறிவித்த போது சொன்ன வார்த்தைகளை அப்படியே நகலெடுத்து தன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளார். 

    இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

    என்னுடைய கேரியர் முழுவதிலும் அன்பையும் ஆதரவையும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1500 மணியிலிருந்து (3 மணி) அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் என்னை ஓய்வு பெற்றுவதாக கருத்தில் கொள்ளுங்கள். என்று பதிவிட்டிருந்தார்.

    இதன் மூலம் அவர் டோனி ரசிகன் என்பதை நிரூபித்துள்ளார். விடைபெறும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

    • டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் - ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின.
    • இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் - ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கென்ட் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பில்லிங்ஸ் 43 ரன்கள் எடுத்தார். ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் தரப்பில் வுட், ஜேம்ஸ், ஹோவெல், லியாம் டாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து ஆடிய ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணி 19.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் இன்னிங்சின் கடைசி ஓவரை கிறிஸ் வூட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எவிசன் எதிர் கொண்டார். அந்த பந்தை வேகமாக விளாசினார். ஆனால் அந்த பந்து எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் பார்கின்சன் மீது தாக்கியது. இதனால் அவர் மைதானத்தின் பாதியில் சுருண்டு விழுந்தார். அவர் மீது பட்ட பந்து பவுலர் வூட் பக்கம் சென்றது. அதனை எடுத்துக் கொண்ட அவர் ஸ்டெம்பை அடித்து அவுட் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஸ்டெம்பை அடிக்காமல் கடைசி பந்தை வீசுவதற்காக சென்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கைதட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது.
    • 2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    பிரிட்ஜ்டவுன்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய நமீபியா அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.

    டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நமீபியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 ரன்கள் எடுத்ததே சூப்பர் ஓவரில் அதிக ரன் ஆகும். இதனை நமீபியா முறியடித்துள்ளது.

    2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஒரு போட்டியில் இலங்கை -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 13 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    2-வது சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:-

    1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) - இலங்கை 174/6 (20 ஓவர்கள்) - இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 - 7/1 - கண்டி, 2012

    2. மேற்கிந்திய தீவுகள் 139 (19.3 ஓவர்கள்) - நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) - மேற்கிந்திய தீவுகள் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 - 17/0 - கண்டி, 2012

    3. ஓமன் 109 (20 ஓவர்கள்) - நமீபியா 109/7 (20 ஓவர்கள்) - நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 - 10/1 - பார்படாஸ், 2024

    • ஹர்திக் - நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது.
    • திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடாஷா ஸ்டான்கோவிக் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதிக்கு குழந்தை உள்ளது.

    ஹர்திக் - நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது. முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியிலும் நடாஷா பங்கேற்காதது, இன்ஸ்டாவில் இருந்து தனது திருமண புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்டவை இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய படங்களை தற்போது ரிஸ்டோர் செய்துள்ளார். நடாஷா இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.


    அந்த வகையில், நடாஷா தனது கணவரை பிரியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.

    இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் வெற்றி.
    • அடுத்த போட்டியில் உகாண்டாவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. லீக் சுற்று போட்டிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிரிஸ் கெயில் டி20 உலகக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை எதிர்கொண்டு விளையாடியது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அடுத்த போட்டியில் உகாண்டாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. 


    • டோர்ஜியோ 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    • பப்புவா நியூ கினியா சார்பில் அசாத் வாலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்றிரவு நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    துவக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை 136 ரன்களில் கட்டுப்படுத்தியது. பப்புவா நியூ கினியா சார்பில் சேசே பான் அரை சதம் கடந்தார், டோர்ஜியோ 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் அசாத் வாலா 2 விக்கெட்டுகளையும், ஜான் கரிகோ, சாட் சோபர் மற்றும் அலெய் நவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • அதன்படி முதலில் ஆடிய பப்புவா நியூ கினியா 136 ரன்கள் எடுத்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீசியது. இதனால் பப்புவா நியூ கினியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் சேசே பான் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து அவுட்டானார். டோர்ஜியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், பப்புவா நியூ கினியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார்.
    • அப்போது அவரிடம் இந்திய அணி பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார்.

    அபுதாபி:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் உரையாடினார். அப்போது கம்பீரிடம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார். அப்போது கம்பீர் சிரித்தபடி பதில் கூறியதாவது:

    நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

    உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட பெரியதாக எப்படி இருக்க முடியும்?

    இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் அல்ல, 140 கோடி இந்தியர்கள்தான். அவர்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள்.

    எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம் அச்சமின்றி இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த பாகிஸ்தான், அமெரிக்காவை ஜூன் 6-ம் தேதி சந்திக்கிறது.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 6-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா வந்திறங்கியது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தது.

    கடந்த தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×