search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாகிஸ்தானை போல இந்தியாவையும் வெல்வோம்- வங்கதேச வீரர் நம்பிக்கை
    X

    பாகிஸ்தானை போல இந்தியாவையும் வெல்வோம்- வங்கதேச வீரர் நம்பிக்கை

    • இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம்.
    • அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாகிஸ்தானைப் போன்று இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்கதேச அணி வீரர் சோரிபுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். அப்படிப்பட்ட பலம் பொருந்திய அணியை நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டால் மொத்த உலகமும் எங்களை திரும்பிப் பார்க்கும். எனவே இந்தியாவில் எங்களது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் கடினமாக பயிற்சி செய்து வருகிறோம்.

    மேலும், பாகிஸ்தானில் எங்களுக்கு நல்ல தொடராக அமைந்தது. இதனால் நாங்கள் இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

    என்று சோரிபுல் கூறினார்.

    Next Story
    ×