search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கிறது- புலம்பிய மகளிர் இங்கிலாந்து பயிற்சியாளர்
    X

    இந்தியாவுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கிறது- புலம்பிய மகளிர் இங்கிலாந்து பயிற்சியாளர்

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
    • இதனால் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்தியாவுக்கு பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற அணிகள் பயிற்சி செய்ய இடம் கிடைக்காமல் இருந்தது என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டோனி லூயிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷார்ஜாவில் சரியான முறையில் பயிற்சி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற அணிகள் தங்கள் போட்டிகளுக்கு வார்ம்-அப் செய்ய இரண்டாம் நிலை ஐசிசி அகாடமி மைதானத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த தொடரில் துபாய் சர்வதேச ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா மட்டுமே மைதானமாக பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு (துபாய் சர்வதேச மைதானம்) பயிற்சி பெற யாருக்கும் வாய்ப்பு இல்லை. நாங்கள் ஐசிசி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறோம். ஆனால் இந்தியாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதை இந்தியா தான் கேட்டு வாங்கியதா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கிறது இல்லையா?

    என்று கேள்வியுடன் உரையை டோனி லூயிஸ் முடித்தார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இதேபோல் இந்தியா அணியின் மீதும் புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×