search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர்கள்.. எங்கெங்கு நடக்கப் போகுது தெரியுமா?
    X

    எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர்கள்.. எங்கெங்கு நடக்கப் போகுது தெரியுமா?

    • ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது.
    • அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.

    ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் எந்த நாடு நடுத்தும் என்ற தகவலும் எந்த வடிவத்தில் நடக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    அதன் விவரம்:-

    2025 - இந்தியா (டி20 ).

    2027 - பங்களாதேஷ் (ஒருநாள்).

    2029 - பாகிஸ்தான் (டி20 ).

    2031 - இலங்கை (ஒருநாள்).

    Next Story
    ×