search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்? வெளியான தகவல்
    X

    2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்? வெளியான தகவல்

    • 2-வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
    • ரிஷப் பண்ட் ஆட இயலாமல் போனால் 2-வது டெஸ்டில் துருவ் ஜூரல் இடம் பெறுவார்.

    பெங்களூரு:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் வருகிற 24-ந்தேதி புனேயில் தொடங் குகிறது.

    இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பரான ரிஷப்பண்ட் ஆட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் 2-வது டெஸ்டில் இருந்து விலகுவார்.

    முதல் டெஸ்ட் போட்டியின்போது அவ ருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கீப்பிங் செய்ய வில்லை. துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். அதே நேரம் அவர் பேட்டிங் செய்து 99 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க காரணமாக இருந்தார்.

    ரிஷப் பண்டின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா ஒப்பு கொண்டார். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ரிஷப்பண்ட் ஆட இயலாமல் போனால் 2-வது டெஸ்டில் துருவ் ஜூரல் இடம் பெறுவார்.

    Next Story
    ×