என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
சேப்பாக்கம் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது
Byமாலை மலர்21 Sep 2024 4:13 AM GMT
- சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குமா? என்ற சந்தேகம்.
- மைதானம் முழுமையாக மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டதால் ஆட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை பெய்து வந்தது. இதனால் போட்டியில் சரியான (காலை 9.30 மணி) நேரத்திற்கு தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
அதேவேளையில் ஆடுகளம் மற்றும் மொத்த மைதானமும் மூடப்பட்டிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழைச்சாரல் முற்றிலுமாக நின்றது. இதனால் போட்டி சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது.
லேசான மழை பெய்து கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அதிக திரண்டு வந்து டிக்கெட் வாங்கினர்.
நேற்று முன்தினம் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X