search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மும்பை அணியில் நீடிப்பாரா ரோகித் சர்மா? வெளியான புது தகவல்
    X

    மும்பை அணியில் நீடிப்பாரா ரோகித் சர்மா? வெளியான புது தகவல்

    • அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது.
    • நான்கு வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. மேலும், ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்க விரும்புகின்ற என்ற விவரங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த சீசனில் வேறொரு அணியில் விளையாடுவார் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது அணியில் நான்கு வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் ரோகித் சர்மா நிச்சயம் இடம்பெறுவார் என்றும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவர் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐபிஎல் 2024 சீசனில் மும்பை அணி விளையாடிய 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம் பிடித்தது.

    Next Story
    ×