search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேயர்ன் முனிச் அணியுடன் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து, அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்தார்.

    டோனி க்ராசை தொடர்ந்து ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    பேயர்ன் முனிச் அணியுடன் மேலும் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
    • முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் களம்கண்டன.

    இந்த போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லெர்மா தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

    முதல் பாதி வரை இதே நிலை நீடித்தது. 0-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதியில் விளையாடியது கொலம்பியா. மறுப்பக்கம் உருகுவே அணி பதில் கோல் அடிக்கும் முயற்ச்சிகளை தீவிரப்படுத்தியது. எனினும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இதன் காரணமாக போட்டி முடிவில் 0-1 என்ற கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோத உள்ளன.

    கோப்பா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடம் பிடிக்கும்.

    • இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.

     


    முதல் பாதி போட்டி முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் போட்டி இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

    போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடித்து வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். மாற்று வீரராக களமிறங்கிய ஒல்லி வேட்கின்ஸ் போட்டியின் 89-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    போட்டி முடிவில் நெதர்லாந்து வீரர்கள் மற்றொரு கோலை அடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
    • ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது.

     


    இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக ஸ்பெயின் அணி வீரர் லாமின் யமால் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதனால் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது.

    இதோடு, நேற்றைய ஆட்டத்தில் தனது அணிக்காக கோல் அடித்த யமாலுக்கு 16 வயது 362 நாட்கள் ஆகும். இதன் மூலம் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை யமால் படைத்துள்ளார்.

    முன்னதாக பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது வேல்சுக்கு எதிராக தனது 17 வயது 239 நாட்களில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.

    • கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது.
    • கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    மறுபுறம் கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது. எனினும், முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் மற்றொரு கோல் அடிக்கும் முயறச்சியில் அர்ஜென்டினா அணியும், பதில் கோல் அடிக்க கனடா அணி வீரர்களும் முயற்சித்தனர்.

    அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது. கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி அடித்த முதல் கோல் அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.

    போட்டி முடிவில் கனடா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய கனடா அணி இந்த தொடரில் தனது கடைசி போட்டியை ஜூலை 14 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடியும்.

    நாளை நடைபெற இருக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். தோல்வியை தழுவும் அணி ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ளும். 

    • கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.
    • யூரோ கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் ஆனார் ஸ்பெயின் அணியின் யமால்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் ராண்டல் கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.

     


    துவக்கத்திலேயே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் யமால் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த போட்டில் சமனில் சென்று கொண்டிருந்தது. இந்த கோலை தொடர்ந்து 4-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது.

    போட்டி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது. இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது.

    • அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார்.
    • அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார்.

    அர்ஜென்டினவைச் சேர்ந்த கால்பந்துலகின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிரபலமாக இருப்பதில் பல்வேறு பிரச்சைனைகளும் உள்ளது. பொது நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் என ரசிகர்களின் அன்புத் தொல்லையை பல பிரபலங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இதில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில், வேலியை எகிறிக் குதித்து மைதானதுக்குள்ளேயே வந்துவிடும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    எனவே இவ்வாறான அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் மெஸ்ஸியின் பாடிகார்டான யாசைன் சூகோ தனது அசாதாரணமான முன்னுணர்வால் அதாவது ரிப்ளெக்ஸ்கலால் மெஸ்ஸியிடம் ஓடிவரும் ரசிகர்களை அவர்கள் நெருங்குவதற்குள் சடாரென முன்வந்து தடுத்துவிடுகிறார்.

    Messi's bodyguard byu/Efficient_Sky5173 ininterestingasfuck

    அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் இருந்த யாசைன் சூகோ ஈராக்கிலும் , ஆப்கனிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார். மெஸ்ஸி கேப்டனாக இருக்கும் மியாமி கிளப் கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்கம் ரெக்கமெண்டேஷனில் யாசைன் மெஸ்ஸியின் பாடிகார்ட் ஆகியுள்ளாராம்.  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டும்  பிரபலமாகியுள்ளார் யசைன் சூகோ.

     

    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
    • லீக் போட்டிகளில் வென்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி போட்டி நாளை (ஜூலை 10) துவங்குகிறது. அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    • அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
    • எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.

    ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.

    எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி  எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார். 

    • யூரோ கோப்பை தொடரில் நேற்றிரவு 2 காலிறுதி போட்டிகள் நடைபெற்றன.
    • ஜூலை 10 ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் துவங்குகின்றன.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் 2024 யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்றிரவு நடைபெற்ற காலிறுதி போட்டிகளில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின.

    முதலில் நடைபெற்ற இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான போட்டி பரபரப்பாக முடிந்தது. போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு அடித்திருந்ததால் பெனால்டி கிக் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இங்கிலாந்து 5-3 என்ற முறையில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

     


    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதையடுத்து வருகிற 10 ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளும், வருகிற 11 ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.

    • என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன்.
    • ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

    ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.

    இந்நிலையில், அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன், அணியைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, வரும் காலங்களில் அவர்களை டிவியில் பார்ப்பேன்" என்று தெரிவித்தார்.

    பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் டோனி க்ராஸ், சர்வதேச போட்டியில் ஜெர்மனி அணிக்காக 108 ஆட்டங்களில் ஆடி 17 கோல்கள் அடித்துள்ளார்.

    ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப்புக்காக 2014-ம் ஆண்டு முதல் டோனி க்ராஸ் விளையாடி வருகிறார். அந்த கிளப் 22 பட்டங்கள் வெல்வதற்கு அவர் உதவிகரமாக இருந்துள்ளார்.

    • 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை
    • கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் ஆகும்

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரில் வைத்து அனல் தெறிக்க நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் பலப் பரீட்ச்சை செய்தன. 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காததால் வெற்றியை பெனால்டி மூலம் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டி ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சிலவா, நினா மெண்டிஸ் ஆகோயோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினுடன் பிரான்ஸ் மோத உள்ளது.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் போர்ச்சுகல் தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. மைதானத்தில் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டார். தோல்வியால் அழுத்த பெபேவுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த தொடரோடு யூரோ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    ×