search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
    • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமேன் கெலிஃப்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமேன் கெலிஃப்

    ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.

    குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.

    குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • லவ்லினா (இந்தியா)-லி கியான் (சீனா) (பெண்களுக்கான 75 கிலோ கால்இறுதி), மாலை 3.02 மணி.
    • இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் கால்இறுதி ஆட்டம்), பகல் 1 30 மணி.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    துப்பாக்கி சுடுதல்:-

    விஜய்வீர் சித்து, அனிஷ் (ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தகுதி சுற்று), பகல் 12 30 மணி. மகேஸ்வரி சவுகான், ரைஜா தில்லான் (பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்று 2-வது நாள்), பகல் 1 மணி.

    கோல்ப்:-

    ஷூபாங்கர் ஷர்மா, ககன்ஜீத் புல்லார் (ஆண்கள் பிரிவின் 4-வது சுற்று), பகல் 12 30 மணி.

    ஆக்கி:-

    இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் கால்இறுதி ஆட்டம்), பகல் 1 30 மணி.

    தடகளம்:-

    பாருல் சவுத்ரி (பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் முதல் சுற்று), பகல் 1.35 மணி, ஜெஸ்வின் ஆல்ட்ரின் (ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    குத்துச்சண்டை:-

    லவ்லினா (இந்தியா)-லி கியான் (சீனா) (பெண்களுக்கான 75 கிலோ கால்இறுதி), மாலை 3.02 மணி.

    பேட்மிண்டன்:-

    லக்ஷயா சென் (இந்தியா)-விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) (ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி), மாலை 3 30 மணி.

    பாய்மரப்படகு:-

    விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி 7-வது மற்றும் 8-வது பந்தயம்), மாலை 3.35 மணி, நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி 7-வது, 8-வது பந்தயம்), மாலை 6.05 மணி.

    • 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது. இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
    • இத்தாலி வீராங்கனை கரினியால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

    போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

    இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.


    போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஒலிம்பிக் குத்துச்சண்டை பாலின சர்ச்சைக்கு மத்தியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிப்-க்கு ஆதரவாக பாடகி சின்மயி ஸ்ரீபாடா ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இமானே கெலிஃப் பெண்ணாக பிறந்தவர், அவர் ஆணல்ல...

    அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடான அல்ஜீரியாவில் அவர்களின் பாலினத்தை மாற்றுவதற்கான உரிமை சட்டவிரோதமானது மற்றும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர் கெலிஃப்பின் குழந்தைப் பருவப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
    • காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.

    போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

    அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.

    இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.

    பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.

    இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா ஜோடி வென்றது.
    • இங்கிலாந்து ஜோடி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-ஜான் பீர்ஸ் ஜோடி, இங்கிலாந்தின் ராஜீவ் ராம்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலியா ஜோடி 6-7 (6-8), 7-6 (7-1), 10-8 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.

    இதில் மேத்யூ எப்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.
    • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சில விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல்களை தேடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏ.சி.களை வழங்கியுள்ளது.

    இதனால் இந்திய வீரர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் முடியும். ஏ.சி.களுக்கான செலவை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    • ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் தனிநபர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் வெண்கலம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சிறந்த வீரர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு தகுதியானவர்கள் என பதிவிட்டுள்ளார்.

    சஜ்ஜன் ஜிண்டாலின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டாலின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனம், எம்ஜிவிண்ட்சர் என்ற சொகுசு காரை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    • இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

     

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவரே இணையத்தின் நாயகன். ஆனால் அந்த 45 நொடிகளுக்காக தான் தனது வாழ்க்கை முழுவதும் உழைத்ததாக யூசுப் மனம் திறந்துள்ளார்.

     

     

    தனது வெற்றி குறித்து துருக்கி ஊடகத்தில் பேசியுள்ள யூசுப், எனக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவைப்பட்டதில்லை, எனது நண்பர்கள் கூட அது பற்றி என்னிடம் கேட்பதுண்டு. ஏன், பிற வீரர் வீராங்கனைகளும் என்னிடம் அதுபற்றி கேட்டனர். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம், நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன், நான் இயற்கையாகவே ஒரு ஷூட்டர் என்று தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் துருக்கியின் சிவில் பாதுகாப்புப் படையான Gendarmerie இல் பறிச்சி பெற்றவர் ஆவார். 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடுதல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். ISSF உலக சாம்பியன் போட்டிகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

     

     

    மேலும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நிச்சயம் தான் தங்கம் வெல்வேன் என்றுநம்புவதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் போட்டியின்போது ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்து மற்றொரு கையால் சுட்டது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு மட்டுமல்ல. அதன்மூலம் சுடும்போது அதிக பேலன்ஸை ஏற்படுத்தவும் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், யூசுப் இன்றைய இன்டர்நெட் சென்சேஷன் என்பது மிகையாகாது. 

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
    • வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்துகொண்டார்.

    இதில் பஜன் கவுர் 5-5 என சமனிலை பெற்றார். இதனால் ஷூட் ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
    • துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.

    இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    • இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
    • அதில் ஷூட் ஆப் முறையில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார்.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹங்கேரி வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தனர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் முறையில் ஹங்கேரி வீராங்கனை வென்று வெண்கலம் வென்றார். தென் கொரியா வீராங்கனை தங்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

    இதன்மூலம் மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மோதவுள்ளார்.

    அரையிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று கார்லோஸ் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-2, என்ற நேர் செட்களில் வென்று நோவக் ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    25 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அல்காரஸை வென்று ஜோகோவிச் பழி தீர்ப்பாரா என்று அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

    வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

    ×