search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • இந்தியா-அயர்லாந்து (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், மாலை 4.45 மணி.
    • பால்ராஜ் பன்வார் (ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் கால்இறுதி), பகல் 1.40 மணி.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 5-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    துப்பாக்கி சுடுதல்:-

    ஸ்ரேயாசி சிங், ராஜேஸ்வரி குமாரி (பெண்கள் டிராப் பிரிவு தகுதி சுற்று), பகல் 12.30 மணி. சரப்ஜோத் சிங்-மனு பாக்கர் (இந்தியா)-ஜின் ஓ யே-வோன்ஹோ லீ (தென்கொரியா), (10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயம்), பகல் 1 மணி, பிரித்விராஜ் தொண்டைமான் (டிராப் 2-வது நாள் தகுதி சுற்று), பகல் 12.30 மணி.

    ஹாக்கி:-

    இந்தியா-அயர்லாந்து (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், மாலை 4.45 மணி.

    பேட்மிண்டன்:-

    சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இந்தியா)-முகமது ரியான் அட்ரியான்டோ-பஜர் அல்பியான் (இந்தோனேசியா), (ஆண்கள் இரட்டையர் லீக் சுற்று), மாலை 5.30 மணி. அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ (இந்தியா)- செத்யானா மபசா-ஏஞ்சலா யு (ஆஸ்திரேலியா), (பெண்கள் இரட்டையர் லீக் சுற்று) மாலை 6.20 மணி.

    துடுப்பு படகு:-

    பால்ராஜ் பன்வார் (ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் கால்இறுதி), பகல் 1.40 மணி.

    வில்வித்தை:-

    அங்கிதா பகத் (இந்தியா)-வியோலிடா மைசோர் (போலந்து), மாலை 5.14 மணி, பஜன் கவுர் (இந்தியா)-சிபா நுராபிபா (இந்தோனேசியா), மாலை 5.27 மணி, (பெண்கள் தனிநபர் பிரிவு), தீரஜ் பொம்மதேவரா-ஆடம் லீ (செக்குடியரசு), (ஆண்கள் தனிநபர் பிரிவு), இரவு 9.15 மணி.

    குத்துச்சண்டை:-

    அமித் பன்ஹால் (இந்தியா)- பேட்ரிக் சினிம்பா (ஜாம்பியா), (ஆண்கள் 51 கிலோ தொடக்க சுற்று), இரவு 7.16 மணி, ஜாஸ்மின் (இந்தியா)-நெஸ்டி பெட்சியோ (பிலிப்பைன்ஸ்), (பெண்கள் 57 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்று), இரவு 9.24 மணி.

    • டேவிஸ் கோப்பையில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
    • இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா என்.ஸ்ரீராம் உடன் இணைந்து களமிறங்கினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே பிரான்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    இந்த நிலையில் இந்திய அணிக்கான எனது கடைசி போட்டியில் விளையாடினே எனத் தெரிவித்துள்ளார். 22 வருடமாக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் விளையாடிய போபண்ணா ஏமாற்றத்துடன் விடைபெறுகிறார்.

    1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயேஸ் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின் டென்னிசில் யாரும் பதக்கம் வெல்லவில்லை. 2016-ம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா உடன் இணைந்து பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    இது இந்தியாவுக்கான எனது கடைசி போட்டியாக இருக்கப்போகிறது. நான் எங்கு இருக்கிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொண்டேன். அது செல்லும் வரை டென்னிசை ரசிக்கப் போகிறேன் என போபண்ணா தெரிவித்துள்ளார்.

    ஜப்பானில் 2026-ல் நடைபெறும் ஆசிய போட்டியில் பங்கேற்கமாட்டேன் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். டேவிஸ் கோப்பையில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    நான் இருக்கும் இடத்திற்கு இது ஏற்கனவே ஒரு பெரிய போனஸ். இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. 2002 முதல், நான் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

    • துருக்கிக்கு எதிராக முதல் 2 செட்டை இந்தியா இழந்தது.
    • துருக்கி 6-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியா - திருக்கி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் செட்டில் இந்திய வீரர்கள் 53 புள்ளிகளும் துருக்கி 57 புள்ளிகளும் பெற்றது. இதனால் முதல் செட்டில் துருக்கி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது செட்டில் இந்தியா 52-ம் துருக்கி 55-ம் பெற்றதால் 4-0 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது.

    3-வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் 55 புள்ளிகளும் துருக்கி 54 புள்ளிகள் பெற்றது. இதனால் 3-வது செட்டில் இந்தியா 2-4 என ஸ்கோர் கணக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நடந்த 4-வது செட்டை 54- 58 என்ற கணக்கில் துருக்கி கைப்பற்றியது.

    இறுதியில் துருக்கி 6-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    • 2-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் (ஸ்பெயின்) நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
    • களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

    இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடாலை 6-1, 6-4 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார். 

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
    • போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடித்தார்.

    2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தமாக 12 அணிகள் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் இரு அணி வீரர்களும் திணறினர்.

    இந்த நிலையில் போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடிக்க அதனை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அர்ஜென்டினா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதனையடுத்து இந்திய அணி கடுமையாக போராடியும் முதல் பாதியில் அர்ஜென்டினாவால் கூட சமன் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதனை அந்த அணி கோலாக மாற்ற தவறியது. இதனை அடுத்து கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஸ் மாற்றப்பட்டார். இது இந்தியா எடுத்த தைரியமான முடிவாக பார்க்கப்பட்டது. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவ போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    இதனை அவர் கோலாக மாற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. பி பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களிலும் ஏ பிரிவில் நெதர்லாந்து பிரிட்டன் அணி முதல் இரண்டு இடங்களிலும் இருந்தது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
    • ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறியதால் 208.4 புள்ளிகள் மட்டுமே பெற்று 4-வது இடம் பிடித்தார்.

    7-வது ரவுண்டின் முடிவில் குரோஷியாவின் மீரான் மரிசிச் 209.8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (8-வது ரவுண்ட்) தகுதி பெற்றதால் அர்ஜுன் பாபுதா 208.4 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

    • இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் மோதுவதாக இருந்தது.
    • ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் போட்டி ரத்தானது.

    பாரீஸ் ஒலிம்பிக்:

    பாரீஸ் ஓலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிரணியான ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் போட்டி ரத்தானது.

    இதனால் குரூப் சி-ல் உள்ள 4 அணிகளில் ஜெர்மனி விலகியதை அடுத்து காலிறுதிக்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. இந்திய வீரர்கள் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று முதலிடத்தில் இருப்பதால் காலிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இதேபோல் பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- தனிஷா க்ராஸ்டோ ஜோடி ஜப்பான் வீராங்கனைகளான சிஹாரு ஷிடா -நமி மாட்சுயாமா ஜோடியுடன் மோதினர். 

    இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    • சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றுப் போட்டி பகல் 12.45 மணிக்கு நடைபெற்றது. அதில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு சரப்ஜோத் சிங்- மனுபாகெர் ஜோடி முன்னேறியுள்ளது.

    அதே சமயம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டால் ஏழாவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    முன்னதாக, இந்திய ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி ஜெர்மனியின் மார்வின் சீடல் மற்றும் மார்க் லாம்ஸ்ஃபஸ் ஆகியோருக்கு எதிரான ஆட்டம் ஜெர்மனி வீரர் மார்க்கின் முழங்கால் காயம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.

    அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.

    4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான  போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
    • இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    பாட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் L போட்டியில் கௌதமாலா வீரர் கெவின் கார்டன் [Kevin Cordon] உடன் விளையாடிய லக்ஷ்யா சென் 21-8, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் கெவின் கார்டன் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்தால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து தற்போது விலகியுள்ள நிலையில் அவருடன் நடந்த போட்டியில் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி நீக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச பேட் மிட்டன் கூட்டமைப்பின் [BWF] விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவே லக்ஷ்யா சென் குருப் L போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொறுத்தே அவரது ராங்கிங் தரவரிசை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
    • துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை மனுபாகெர் வெண்கல பதக்கம் வென்றார். அவர் 221.7 புள்ளிகள் பெற்றார்.

    வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் மனுபாகெர் புதிய வரலாறு படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), சாய்னா நேவால் (பேட்மின்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), பி.வி.சிந்து (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மீரா பாய்சானு (பளு தூக்குதல்), லவ்லினா (குத்துச் சண்டை) ஆகியோருடன் மனுபாக்கர் இணைந்தார்.

    துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் விஜய் குமார் (வெள்ளி), ககன்நரங் (வெண்கலம்) பதக்கம் பெற்றனர். ரியோடி ஜெனீரோ, டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கிடைக்கவில்லை. தற்போது இந்தப் போட்டியில்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியது.


    ஒட்டு மொத்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 5-வது பதக்கம் கிடைத்தது.

    மனுபாகெரை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் ரமிதா ஜின்டல், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றனர். இதில் ரமிதா 631.5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அடைந்தார். முதல் 8 இடங்கள் வரையே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

    இதே போல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். மற்றொரு இந்தியரான சந்தீப்சிங் 629.3 புள்ளிகளு டன் 12-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

    ரமிதா மோதும் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. அர்ஜுன் பபுதா விளையாடும் இறுதி சுற்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இருவரும் பதக்கம் பெறுவார்களா? என்று ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இதே போல ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவிலும் பதக்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    தருணதீப்ராய், தீரஜ் பொம்ம தேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் பங்கேற்கிறது. தர வரிசையில் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி கால் இறுதி, அரை இறுதியில் வெற்றி பெற்று பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒலிம்பிக் போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர்.
    • பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், சிரஞ்சீவி கலந்து கொண்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹாவை வீழ்த்தினார்.

    இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

    இப்போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர். போட்டி முடிந்ததும் பி.வி.சிந்து உடன் ராம் சரண், உபாசனா புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த படத்தை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதற்கு முன்னதாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், அவரது மனைவி உபாசனா மற்றும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×