search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு 5 தங்கம் கிடைத்தது.
    • 3, 4 இடங்கள் முறையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலா கலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. போட்டி தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை அமெரிக்க அணியால் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க இயலவில்லை.

    இந்த நிலையில் நேற்றைய 9-வது நாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு 5 தங்கம் கிடைத்தது.

    இதனால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. ஆனால் அந்த இடத்தை அமெரிக்காவால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை.

    மீண்டும் சீனா முதல் இடம் பிடித்தது. சீனா இதுவரை 21 தங்கம், 17 வெள்ளி, 14 வெண்கலம் ஆக மொத்தம் 52 பதக்கத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    அமெரிக்கா 19 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கலம் ஆக மொத்தம் 72 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

    3, 4 இடங்கள் முறையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது. 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 58-வது இடத்தில் உள்ளது.

    • முதல் செட்டை லக்ஷயா சென் கைப்பற்றினார்.
    • இரண்டாவது செட்டை மலேசிய வீரர் கைப்பற்றினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லீ சி ஜியா உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக மலேசியா வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 21-11 என்ற கணக்கில் மலேசிய வீரர் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை தங்கம் வென்றார்.
    • சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் உடன் மோதினார். இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கம் வென்றார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் பெற்றதும், தன் கையில் ஸ்பெயின் நாட்டை நினைவு கூரும் வகையில் சிறிய பின் வைத்திருந்தார்.

    அவரது இந்த செயல் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுக்கு இந்தப் பதக்கத்தை சமர்ப்பிப்பது போல இருந்தது. சீனா வீராங்கனையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    அரையிறுதியில் கரோலினா மரின் முன்னிலை பெற்றிருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
    • துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றது

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.

    இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது

    வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

    • இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3-1 என வென்றது.
    • ஒற்றையர் பிரிவின் 2 சுற்றிலும் மணிகா பத்ரா வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனிய ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

    2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-0 என வென்றார். இதன்மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

    3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

    4வது சுற்றில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 1-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகித்தன.

    இறுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இந்தியா ருமேனியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    • இந்தியா-ஜெர்மனி ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது.
    • மற்றொரு அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகிறது.

        பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் இங்கிலாந்துடன் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. 22-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்டன் கோல் அடித்தார்.

    இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்தியவீரர் அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 வீரர்களுடன் விளையாடி இந்தியா பெற்ற இந்த வெற்றி சிறப்பானது.

    இந்திய அணி அரை இறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதியில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து விடும். ஜெர்மனியை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். அந்த அணி ஸ்பெயினிடம் மட்டுமே தோற்று இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெர்மனி அணி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியமும், வெள்ளி பதக்கம் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவும் கால் இறுதியிலேயே வெளியேறி விட்டன. வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

    பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-சீனா (பிற்பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-ஜெர்மனி (மாலை 4 மணி ) , நெதர்லாந்து-இங்கிலாந்து (இரவு 9 மணி), பெல்ஜியம்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) மோதுகின்றன.

    • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இன்று மோதுகிறார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென் கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் உடன் மோதினார்.

    இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர்.
    • ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும்.

    பாரிஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. இந்த நிலையில் நேற்றைய 9-வது நாளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

    இந்த பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நோவா லைல்ஸ் முதல் 30 மீட்டர் வரை 8-வது இடத்தில் தான் இருந்தார். ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார். ஆனால் 50 மீ தூரம் கடந்த பின் நோவா லைல்ஸ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். கடைசியாக நோவா, தாம்சன் ஆகியோர் ஒரே நேரத்தில் இலக்கை அடைந்தனர்.

    இருவரும் 9.79 நொடிகளில் வந்திருந்தாலும், நோவா லைல்ஸ் - தாம்சன் இடையில் 0.784 மைக்ரோ நொடிகள் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் தாம்சன் 2-வது இடத்தை பிடித்தார். 3-வது இடத்தை அமெரிக்காவின் கெர்லி பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

    இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றொரு முக்கிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் 100 மீட்டர் ரேஸில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர். 4-வது இடத்தில் வந்த தென்னாப்பிரிக்காவின் அகானி 9.82 நொடிகளிலும், இத்தாலியின் ஜேகப்ஸ் 9.85 நொடிகளிலும், போட்ஸ்வானாவின் டிபோகோ 9.86 நொடிகளிலும், அமெரிக்காவின் கென்னத் 9.88 நொடிகளிலும், ஜமைக்காவின் செவில் 9.91 நொடிகளிலும் பந்தயத்தை முடித்துள்ளனர்.

    ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். வெற்றிக்கு, தோல்விக்கும் இடையிலான இடைவெளி என்பது மைக்ரோ நொடிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்ததை விடவும், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கு நடுவர்கள் அதிக நேரம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
    • . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.

    இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.

    இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ்-க்கும் வெரும் 0.16 நொடிகளே வித்தியாசம்.
    • போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து இருந்தனர்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைப்பெற்றது. அதில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் முதலிடம் பிடித்தார்.

    100 மீட்டர் தடக்களத்தை வெறும் 9.784 நொடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார். ஏற்கனவே உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட் 9.63 நொடிகளில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ்-க்கும் வெரும் 0.16 நொடிகளே வித்தியாசம்.

    போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து இருந்தனர். இதனால் யார் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் என்று தெரிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. பின் நேரத்தை வைத்து பார்க்கும் போது நோவா 0.005 மில்லி நொடிகளில் கிஷேனை விட முன்கூட்டியே வந்ததால் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.

    நோவா - 9.784 - முதல் இடம்

    தாம்ப்சன் - 9.789 இரண்டாம் இடம்

    நோவாவின் வெற்றி பலரால் கொண்டாடப்பட்டது. வெற்றிப்பெற்ற பின் நோவா அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "எனக்கு ஆஸ்துமா. ஒவ்வாமை, டிஸ்லக்ஸியா, ஏடிடி, மன அழுத்தம் இருக்கிறது. ஆனால் நான் கூறுகிறேன் இது எல்லாம் இருந்தும் என்னால் முடிந்தது என்றால். ஏன் உங்களால் முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    நோவாவின் இப்பதிவு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. 

    • விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.
    • நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டியெறிதல் பிரிவுக்கான போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 6] தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் கிஷோர் ஜெனாவும் விளையாடுகின்றனர்.

    இதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச  விசா வழங்கப்படும் என்று ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் நீரஜ் தங்கம் வென்றால் Atlys இந்தியப் பயனர்களுக்கு உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல இலவச  விசா வழங்கப்படும். இதன்மூலம் பயன்பெற விரும்புவார்கள் உங்களின் இமெயில் முகவரியை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

     

    நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ×