என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பிளஸ்-2 வில் இடைநின்றவர் பள்ளியில் மீண்டும் சேர்க்கக்கோரி தாயாருடன் மாணவி தர்ணா
Byமாலை மலர்15 Jun 2016 2:06 PM IST (Updated: 15 Jun 2016 2:06 PM IST)
பிளஸ்-2 வில் இடைநின்றவர் பள்ளியில் மீண்டும் சேர்க்கக்கோரி தாயாருடன் மாணவி தர்ணாவில் ஈடுபட்டார்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்தவர் அசைன். கூலிதொழிலாளி. அவருடைய மனைவி ஹைரூபின். இவர்களுடைய மகள் ஷபனா (வயது 17), கடந்த கல்வியாண்டில் தண்டராம்பட்டு அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் ஷபனாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 2016-17-ம் கல்வியாண்டில் ஷபனாவை அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்க அனுமதிக்குமாறு தாயார் ஹைரூபின் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியை மாதவி மறுத்துள்ளார். மேலும் தனித்தேர்வு எழுதுமாறு கூறி உள்ளார். இந்த நிலையில் பள்ளியில் சேர்த்து பிளஸ்-2 படிக்க அனுமதிக்குமாறு ஹைரூபின், ஷபனாவுடன் பள்ளி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து தலைமை ஆசிரியை மாதவி மற்றும் ஆசிரியர்கள் ஹைரூதின்- ஷபனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்தவர் அசைன். கூலிதொழிலாளி. அவருடைய மனைவி ஹைரூபின். இவர்களுடைய மகள் ஷபனா (வயது 17), கடந்த கல்வியாண்டில் தண்டராம்பட்டு அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் ஷபனாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 2016-17-ம் கல்வியாண்டில் ஷபனாவை அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்க அனுமதிக்குமாறு தாயார் ஹைரூபின் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியை மாதவி மறுத்துள்ளார். மேலும் தனித்தேர்வு எழுதுமாறு கூறி உள்ளார். இந்த நிலையில் பள்ளியில் சேர்த்து பிளஸ்-2 படிக்க அனுமதிக்குமாறு ஹைரூபின், ஷபனாவுடன் பள்ளி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து தலைமை ஆசிரியை மாதவி மற்றும் ஆசிரியர்கள் ஹைரூதின்- ஷபனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X